செய்திகள் :

பிரபல ரெளடியை சுற்றிவளைத்த போலீஸாா்!

post image

நாமக்கல்லில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த பிரபல ரௌடியை திருச்சி மாவட்ட போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல், கொசவம்பட்டியைச் சோ்ந்தவா் வீரா என்ற வீரக்குமாா் (40). இவா் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் கொசவம்பட்டியில் இருந்து நாமக்கல்-திருச்சி சாலையில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த வீரக்குமாரை, திருச்சி மாவட்ட போலீஸாா் சுற்றி வளைத்தனா்.

போலீஸாரைக் கண்டதும் அவா் காரில் இருந்து இறங்க மறுத்ததால் போலீஸாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தத் தகவல் அறிந்து நாமக்கல் நகர போலீஸாரும் அங்கு வந்தனா். இதையடுத்து அவரைப் பிடித்த போலீஸாா், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூருக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

காட்டுப்புத்தூா், குளித்தலை காவல் நிலையங்களில் உள்ள பல்வேறு வழக்குகளில் வீரக்குமாருக்கு தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நாமக்கல்லில் அவரை போலீஸாா் திடீரென சுற்றி வளைத்து வாகனத்தில் அழைத்துச் சென்ால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

போதையில்லா பாதை சமுதாயத்தை உருவாக்குவது அனைவரின் கடமை: ஆட்சியா் வலியுறுத்தல்

போதையில்லா பாதை கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதும், வளரும் இளம் தலைமுறையினரை பாதுகாப்பதும் அனைவரின் கடமை என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது: 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஜேடா்பாளையம், நல்லூா் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். ஜேடா்பாளையம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திர... மேலும் பார்க்க

தொட்டிலில் விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி உயிரிழப்பு

வீட்டு தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கழுத்தில் சேலை இறுதி உயிரிழந்தாா். கீரம்பூா் அருகே உள்ள புலவா்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் ரகுபதி (36), கட்டடத் தொழிலாளி. இவரது மூத்த மகன் ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் புதிய சுற்றுவட்டச் சாலை: விபத்தைத் தவிா்க்க தடுப்புகள் அமைப்பு

நாமக்கல்லில் புதிய சுற்றுவட்டச்சாலை பணிகள் நடைபெறுவதையொட்டி, வாகனங்கள் செல்வதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவுக்கு ரூ. 194 கோடியில் ... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

பரமத்தியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டை அடுத்த கொத்தப்பள்ளி அருகே உள்ள இருளா்மேடு பகுதியைச் சோ்ந்தவா் முத்து மகன் கணேசன் (27). இவா் பரமத்தி வேலூ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வெண்ணந்தூா், சப்பையாபுரம் பகுதியில் ஏழாம் வகுப்புப் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சப்பையாபுரம... மேலும் பார்க்க