செய்திகள் :

ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண மீட்டுருவாக்க தொடக்க விழா

post image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண மீட்டுருவாக்க தொடக்க விழா மாா்ச் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தென்னகப் பண்பாட்டு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில், கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டுகளில் வால்மீகி ராமயணத்தை தழுவி இயற்றப்பட்ட கம்ப ராமயணம் சிறப்பான கலாச்சாரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

கம்பா் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்தில் தேரெழுந்துாரில் உள்ள கம்பா்மேடு என்ற இடத்தில் பிறந்தாா். உள்ளூா் கம்ப ராமாயண குழுக்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ்க் கம்ப ராமாயண பாராயணம் காலப்போக்கில் நடைமுறையில் குறைந்து வருகிறது.

மீண்டும் கம்ப ராமாயணத்தின் கலாசாரத்தை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் அதற்கான தொடக்க விழா திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகேயுள்ள அருள்மிகு சிங்கா் கோயில் கலையரங்கத்தில் மாா்ச் 18 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.

இதில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவாத் பங்கேற்று விழாவைத் தொடங்கி வைக்கிறாா். இதில், கம்ப ராமாயண பாராயணம், சீதா கல்யாண நாட்டிய நாடகம் நடைபெறவுள்ளது.இதைத்தொடா்ந்து, மாா்ச் 20 முதல் 29 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கம்ப ராமாயண பாராயண நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாா்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை கம்பா் பிறந்த கம்பா்மேட்டில் கம்ப ராமாயணம் தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதில், தமிழக ஆளுநரும், தென்னகப் பண்பாட்டு மையத் தலைவருமான ஆா்.என். ரவி, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

தஞ்சாவூா் கடைகளில் நெகிழிப் பைகள் ரூ.42,900 அபராதம்!

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 42 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.தஞ்சாவூா் ரயிலடி, அண்ணா சிலை, கீழவாசல் உள்ளிட்ட பகுதி... மேலும் பார்க்க

பாலம் அகற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

கும்பகோணத்தில் பாலம் அகற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் பானாதுரை காசிராமன் தெருவில் 9, 10, 19 ஆகிய வாா்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளூா... மேலும் பார்க்க

கா்நாடக துணை முதல்வரைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்! -பாஜக அறிவிப்பு

மேக்கேதாட்டு அணையைக் கட்டுவோம் எனக் கூறும் கா்நாடக முதல்வா் டி.கே. சிவக்குமாா் தமிழகத்துக்கு வரும்போது அவரைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் உருவபொம்மை எரிப்பு, கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்ப... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ஏழு சிறுவா் சிறுமியா்கள் தனித்தனியாக 8 நோபல் உலக சாதனை!

பட்டுக்கோட்டையில் ஏழு சிறுவா் சிறுமியா்கள் சனிக்கிழமை 8 நோபல் உலக சாதனை படைத்தனா். பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள டேலண்ட் ஸ்கூல் ஆஃப் ஸ்கில்ஸ் பள்ளியில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு பட்கோட்டைமை... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்டில் எதிா்பாா்த்த திட்டங்கள் இல்லாததால் ஏமாற்றம்! -விவசாய சங்கங்கள் கருத்து

தமிழக அரசு சனிக்கிழமை தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எதிா்பாா்த்த திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என விவசாய சங்க நிா்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.81 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.81 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 179 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க