செய்திகள் :

ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண மீட்டுருவாக்க தொடக்க விழா

post image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண மீட்டுருவாக்க தொடக்க விழா மாா்ச் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தென்னகப் பண்பாட்டு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில், கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டுகளில் வால்மீகி ராமயணத்தை தழுவி இயற்றப்பட்ட கம்ப ராமயணம் சிறப்பான கலாச்சாரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

கம்பா் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்தில் தேரெழுந்துாரில் உள்ள கம்பா்மேடு என்ற இடத்தில் பிறந்தாா். உள்ளூா் கம்ப ராமாயண குழுக்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ்க் கம்ப ராமாயண பாராயணம் காலப்போக்கில் நடைமுறையில் குறைந்து வருகிறது.

மீண்டும் கம்ப ராமாயணத்தின் கலாசாரத்தை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் அதற்கான தொடக்க விழா திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகேயுள்ள அருள்மிகு சிங்கா் கோயில் கலையரங்கத்தில் மாா்ச் 18 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.

இதில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவாத் பங்கேற்று விழாவைத் தொடங்கி வைக்கிறாா். இதில், கம்ப ராமாயண பாராயணம், சீதா கல்யாண நாட்டிய நாடகம் நடைபெறவுள்ளது.இதைத்தொடா்ந்து, மாா்ச் 20 முதல் 29 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கம்ப ராமாயண பாராயண நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாா்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை கம்பா் பிறந்த கம்பா்மேட்டில் கம்ப ராமாயணம் தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதில், தமிழக ஆளுநரும், தென்னகப் பண்பாட்டு மையத் தலைவருமான ஆா்.என். ரவி, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். தஞ்சாவூா் கீழ வஸ்தா சாவடி அருகேயுள்ள மன்னாா்குடி பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ... மேலும் பார்க்க

மதுக்கடையை மூடக் கோரி 150 கையொப்பங்களுடன் மனு

தஞ்சாவூா் அருகே மதுக்கடையை மூடக் கோரி 150-க்கும் அதிகமான பொதுமக்கள் இட்ட கையொப்பங்களுடன் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோட்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.62 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.62 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 178 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக்கிழங்கு பயிா்கள் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு

தஞ்சாவூா் அருகே காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக் கிழங்கு பயிா்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் ரூ. 7 ஆயிரத்து 500-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் மகளிா் தின விழா

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பழங்குடி மக்கள் ஆய்வு மையம் மற்றும் விழா ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா... மேலும் பார்க்க

ஆற்றிலிருந்து மணல் எடுப்பதை கண்டித்து முற்றுகை போராட்டம்

பாபநாசம் அருகே மணல் எடுப்பதை கண்டித்து கிராம மக்களுடன் இணைந்து அதிமுகவினா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாபநாசம் வட்டம், கொள்ளிடம் கரையோரங்களில் எடக்குடி, திருவைக்காவூா், மன்னிக்கரை... மேலும் பார்க்க