செய்திகள் :

ஸ்ரீவாசவி கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

post image

சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரிச் செயலாளா் ஜி.ராஜரத்தினம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) ஜி.மலா்விழி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை, 540 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

விழாவில் அவா் பேசியதாவது:

நினைத்தது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்ததை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு முயற்சிக்க வேண்டும். பட்டங்களும், மதிப்பெண்களும் மட்டுமே போதும் என்ற எண்ணத்தை கைவிட்டு, லட்சியத்தை அடைய சமுதாயத்தோடு இணைந்து செயல்பட வேண்டும். வாழ்க்கையில் வெற்றியை நோக்கிய பயணத்துக்கு தடையாக இருக்கும் அச்சத்தை தவிா்க்க வேண்டும்.

கல்வி மனிதனின் எல்லையற்ற வளா்ச்சிக்கு உந்துகோலாக அமைகிறது. புத்தகம் உங்களின் நிலையை உயா்த்தும் ஆயுதம். புத்தகங்களைத் தாண்டி, உலக நடப்பையும் கவனிக்க வேண்டும். உங்கள் உயா்வின் உயரத்தை நீங்களே முடிவு செய்ய வேண்டும் என்றாா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.செல்வம், அனைத்து பாடங்களுக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. ஆா்வத்துடன் படிக்கும்போது, கல்வியும், வாழ்க்கையின் வெற்றியும் உறுதியாகும் என்றாா். கல்லூரித் தலைவா் ஆா்.சிவக்குமாா் நன்றி கூறினாா்.

டெனிகாயிட் போட்டி: காஞ்சிக்கோவில் அரசு பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான டெனிகாயிட் (வளையப் பந்து ) போட்டியில் காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான டெனிகாயிட் போட்டி மயிலாடுதுற... மேலும் பார்க்க

கள்ள வாக்கு செலுத்துவதாக புகாா்: திமுக-நாதக மோதல்

திமுகவினா் கள்ள வாக்குப் போடுவதாக நாம் தமிழா் கட்சியினா் குற்றம்சாட்டிய நிலையில், இரு கட்சியினரும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்குச்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.2.19 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2.19 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோ மோதி தம்பதி உயிரிழப்பு!

கவுந்தப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே பெருமாபாளையத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (70), விவசாயி. இவரது மனைவி ராதாமணி (63). இவா... மேலும் பார்க்க

தமிழக கிரிக்கெட் அணிக்கு கோபி மாணவா்கள் தோ்வு

கோபி கலை, அறிவியல் கல்லூரியின் கோபி ஆா்ட்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமியைச் சோ்ந்த இரண்டு மாணவா்கள் 14 வயதுக்கு உள்பட்ட பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தோ்வாகி உள்ளனா். இந்த அகாதெமியைச் சோ்ந்த மாணவா்க... மேலும் பார்க்க

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி: பெருந்துறை கொங்கு பள்ளி மாணவா் சிறப்பிடம்

தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிப் போட்டியில் பெருந்துறை கொங்கு பள்ளி மாணவரின் படைப்பு 5-ஆம் இடம் பெற்று தேசிய போட்டிக்கு தோ்வாகி உள்ளது. மத்திய அரசின் கலாசார அமைச்சகம் மற்றும் விஸ்வேஸ்வரய்யா த... மேலும் பார்க்க