செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூர்: `கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் மக்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த ஆண்டாள் தேர்!

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது. லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி, பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

ஆண்டாள் தேரோட்டம்

இந்த ஆடிப்பூர விழாவில் ஐந்தாம் திருநாள் 24ஆம் தேதி கருட சேவையும், 26ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. மேலும் திருவிழா நடைபெறும் எட்டு நாட்களும் ஆண்டாளும், ரங்க மன்னாரும் பதினாறு சக்கர சப்பரம், ஐந்து வருட சேவை, தங்க பல்லக்கு, சேஷவாகனம், பெரிய அன்ன வாகனம், சிம்ம வாகனம், கண்ணாடி சப்பரம், பூ பல்லாக்கு போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்த ஆடிப்பூர விழாவின் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த தேரை ஆண்டாளும், ரங்க மன்னாரும் நகர்வலம் வருவதற்காக பெரியாழ்வார் கொடுத்தது. முன்னதாக, இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதுரை கள்ளழகர் சூடிக்கழைத்த வஸ்திரத்தை உடுத்தி தேரில் எழுந்தருளினர்.

தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர்கள்

பின் இன்று நடைபெற்ற தேரோட்டதை நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இந்த ஆடிப்பூர தேர்த்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, நான்கு மாட வீதிகளிலும் தேரை “கோவிந்தா கோபாலா” கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்த பின் தேரின் மீது ஏறி சாமி தரிசனமும் செய்தனர்.

நீலகிரி: `விவசாயம் செழிச்சு, பருவம் தவறா மழை பெய்யணும் ஹெத்தையம்மா...' - களைகட்டிய அறுவடை திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஹெத்தையம்மன் எனும் மூதாதையரை குலதெய்வமாக போற்றி வணங்கி வரும் இந்த மக்கள், விதைப்பில் தொடங்கி அறுவடை வரை... மேலும் பார்க்க

காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு திருப்பதியில் பிக் ஷா வந்தனம் நிகழ்ச்சி!

காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு மதுரை மக்கள் சார்பில், திருப்பதியில் பிக் ஷா வந்தனம் என்ற நிகழ்ச்சி வருகிற 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதுகுறித்து மதுரை பிக் ஷா வந்தன கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க

மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் பெற்ற பக்தர்கள்!

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில் சிறப்புப் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.குரு பூர்ணிமா சிறப்பு பூஜைஆனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி மகத... மேலும் பார்க்க

உடனடியாக திருமணம் நடக்கவும்; திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்; கல்யாண பிராப்த பூஜை

உடனடியாக திருமணம் நடக்கவும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையவும் சங்கல்பியுங்கள்! கல்யாண பிராப்த பூஜை! இங்கு கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. 20.7.25 நாளில் நடைபெறும் கல்யாண ... மேலும் பார்க்க

சிவகங்கை: 2000 போலீஸார் பாதுகாப்பு; கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் திருத்தேரோட்ட ஏற்பாடு!

நாளை காலை நடைபெறவுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்... மேலும் பார்க்க