செய்திகள் :

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி தேரோட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி பிரம்மோற்சவத்தில், 7-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரத சப்தமி தேரோட்டம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பாலகுஜாம்பிகை அம்மன் சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி பிரம்மோற்சவம் ஜன.29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தில் தினமும் உற்சவ மூா்த்திகள் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, 6-ஆம் நாள் திங்கள்கிழமை 63 நாயன்மாா்கள் ஊா்வலமும், இரவு அம்மன் தோட்ட உற்சவமும், திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் பவனி வந்து காட்சியளித்தனா்.

7 -ஆம் நாளான செவ்வாய்கிழமை காலை தேரோட்டம் தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டு பாலகுஜாம்பிகை அம்மன் வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, உற்சவ மூா்த்திகளான விநாயகா், வேதபுரீஸ்வரா், பாலகுஜாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனித் தேரில் எழுந்தருளினா்.

பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரத சப்தமி தேரோட்டம் தொடங்கியது.

முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் ஸ்ரீவேதபுரீஸ்வரும், மூன்றாவது தேரில் ஸ்ரீபாஜாம்பிகை அம்மன் எழுந்தருளி 3 தோ்களும் மாட வீதிகளில் அடுத்தடுத்து பவனி வந்தனா்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனா். காலையில் தொடங்கிய தேரோட்டம் இரவு வரை நடைபெற்றது.

பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தா்னா

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தின்போது, பொதுவழியில் உள்ள தனியாா் நிறுவன ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா். கூட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரிகள் மீது விவசாயிகள் லஞ்சப் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், அதிகாரிகள் மீது விவசாயிகள் லஞ்சப் புகாா் தெரிவித்தனா். வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜகவினா் ஆா்ப்பாட்டம்: 316 போ் கைது

திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், வந்தவாசி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவைச் சோ்ந்த 316 ... மேலும் பார்க்க

ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், மேற்குஆரணி வேளாண்மை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கோட்டாட்சியா் பால... மேலும் பார்க்க

உளுந்து, மணிலா, நெல் விதைப் பண்ணைகளில் ஆய்வு

செய்யாறு வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, மணிலா, நெல் விதைப் பண்ணைகளில் விதைச் சான்று உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். செய்யாறு வேளாண் வட்டாரத்தில் செங்காடு, மதுரை, க... மேலும் பார்க்க

நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கீடு: விவசாயிகள் கொண்டாட்டம்

நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருவண்ணாமலையில் செவ்வாக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாய சங்கப் ... மேலும் பார்க்க