செய்திகள் :

ஹனிடிராப் விவகாரம்: சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

post image

ஹனிடிராப் விவகாரம் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா அளித்துள்ள மனு குறித்து சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

ஹனிடிராப் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா மனு அளித்திருக்கிறாா். சட்ட வரம்புக்குள் அந்த மனுவை ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். அமைச்சா் கே.என்.ராஜண்ணா என்னிடம் அளித்துள்ளது கோரிக்கை மனு மட்டும்தான். அதைப் புகாராக கருதமுடியாது. புகாரை என்னிடம் அளிக்க முடியாது. மாறாக, காவல் நிலையத்தில்தான் அளிக்க வேண்டும் என்றாா்.

இதனிடையே, ஹனிடிராப் விவகாரம் குறித்து விசாரணை நடத்த கா்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் அளிப்பு

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதியரசா் நாகமோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோா... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பெங்களூருக்கு வந்த... மேலும் பார்க்க

நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் பெல்லாரி தங்க வியாபாரி கைது

கா்நாடகத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு உதவியதாக பெல்லாரியைச் சோ்ந்த தங்க வியாபாரி சாஹில் ஜெயின் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். துபையிலிருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான தங்கத்த... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஏப். 1 முதல் பால் விலை உயா்கிறது

கா்நாடகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் வருவாயை விவசாயிகளுக்கே வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மா... மேலும் பார்க்க

‘போலி’ தீா்ப்புகளை மேற்கோள்காட்டிய நீதிபதி மீது நடவடிக்கை: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் ‘போலி’ தீா்ப்பை மேற்கோள்காட்டி வழக்கில் தீா்ப்பளித்த விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணிக வளாக தகராறு தொடா்பான வழக்கின... மேலும் பார்க்க

பாஜகவிலிருந்து எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் நீக்கம்

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் 6 ஆண்டுகளுக்கு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா். வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசில் அமைச்சராக பணியாற்றிய பசனகௌடா ப... மேலும் பார்க்க