செய்திகள் :

ஹால் ஆஃப் ஃபேம்: தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

post image

ஐ.சி.சி.யின் பெருமைமிகு 'ஹால் ஆஃப் ஃபேம்' வரிசையில் மகேந்திர சிங் தோனி சேர்க்கப்பட்டதற்காக அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லெஜண்டரி வீரர்களுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஐசிசி சார்பில் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் நேற்று (ஜூன் 9) அறிவிக்கப்பட்டது.

அதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இடம்பெற்றுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:

ஐ.சி.சி.யின் பெருமைமிகு 'ஹால் ஆஃப் ஃபேம்' வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்குத் தலைமை தாங்கியது தொடங்கி, அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனை படைத்து, அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்பது முதல் சென்னை அணியை 5 முறை ஐ.பி.எல். கோப்பையையும், இருமுறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் வெற்றிபெறச் செய்தது வரை நீங்கள் உயர்சிறப்பான கிரிக்கெட் மரபைக் கட்டியெழுப்பியுள்ளீர்கள்.

உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள்! விக்கெட்கீப்பிங் என்பதை ஒரு கலைநேர்த்தியாக மாற்றிக் காட்டினீர்கள்! ஒரு தலைமுறையையே உங்களது தெளிவாலும் உறுதியாலும் ஊக்குவித்துள்ளீர்கள்.

உங்களது பயணம் கிரிக்கெட் வரலாற்றில் தற்போது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே 'Thala For a Reason' என்ற புகழுரை ஓயாது; என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இந்தியாவுக்கே தலைமை.. நாட்டின் என்ஜின் தமிழகம்தான்: மு.க. ஸ்டாலின்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.நீர்நிலைகளை ஆக்ரமித்துக் கட்டப்படும் கட்டடங்களை அகற்றா... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனத்துக்கு கட்டணம்: இபிஎஸ் கண்டனம்

சென்னை: ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் விதிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்... மேலும் பார்க்க

மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை: மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்று தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளாா். கீழடி அகழாய்வு குறித்து மத்திய அமைச்சா் ஷெகாவத் கருத்துக்கு, ‘எக்ஸ்... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் முப்படை ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

சென்னை: திருச்சியில் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள முப்படைகளில் பணியாற்றிய ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாமை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா்.சென்னை தேனாம்பேட்டையில... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்: திமுகவுக்கு பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க... மேலும் பார்க்க

சென்னையில் பலத்த மழை! 19 மாவட்டங்களில் இரவு வரை நீடிக்கும்...

சென்னை: சென்னையிலும் 18 மாவட்டங்களிலும் இரவு வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருவள்ளூர்காஞ்சிபுரம்செங்கல்பட்டுதிருவண்ணாமலைராணிப்பேட்டைவிழுப்புரம்கள்ளக்குறிச்சிசிவகங்கைராமநாத... மேலும் பார்க்க