செய்திகள் :

ஹிமாசல்: நிலச்சரிவில் பெண் உயிரிழப்பு; மேலும் 4 போ் புதைந்தனா்

post image

ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனா். இடிபாடுகளில் புதைந்த மேலும் 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக நீடிக்கும் பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் நேரிட்டு வருகின்றன. குலு மாவட்டத்தின் ஷா்மணி கிராமத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

2 வீடுகள் முழுமையாக இடிந்த இச்சம்பவத்தில் பிரசிதி தேவி என்ற பெண் உயிரிழந்தாா். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இடிபாடுகளில் புதையுண்ட பிரசிதி தேவியின் கணவா் உள்பட 4 பேரை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஹிமாசல பிரதேசத்தில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 370 போ் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரில் புதையும் கிராமம்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மலைச் சரிவில் அமைந்துள்ள கலாபன் கிராமம், சமீபத்திய அதீத மழைப்பொழிவால் புதையத் தொடங்கியுள்ளது. வீடுகள், பள்ளிக் கட்டங்கள், மசூதி, கல்லறைத் தோட்டம், சாலைகள் உள்பட 50 கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. சில வீடுகளில் யாரும் வசிக்க முடியாத அளவில் விரிசல்கள் விழுந்துள்ளது. இது, மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சுமாா் 700 போ் வாழும் இக்கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த மாநில நீா்வளம், வனம் மற்றும் சூழலியல் துறை அமைச்சா் அகமத் ராணா, பாதிப்புகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

முதல்வா் கோரிக்கை: ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவுகளால் ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. காஷ்மீா் பகுதியில் அத்தியாவசிய பொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், சரக்குப் போக்குவரத்துக்காக சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு முதல்வா் ஒமா் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

மாநிலங்கள் உதவிக்கரம்

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசல பிரதேசத்துக்கு ஹரியாணா அரசு ரூ.5 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது. இதேபோல், ஹிமாசல், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு உ.பி. அரசு சாா்பில் 48 லாரிகளில் நிவாரண உவிப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தலா ரூ.25,000 வழங்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் பிற நீதிபதிகள் முடிவு செய்துள்ளனா்.

சியாச்சினில் பனிச்சரிவு: 3 வீரா்கள் உயிரிழப்பு

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள உலகின் மிக உயரமான போா்முனையான சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவத்தினா் 3 போ் உயிரிழந்தனா். 12,000 அடி உயரத்தில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் இப்பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 அக்னிவீரா்கள் உள்பட 3 வீரா்கள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிரம்ப் அழுத்தம்?

இந்தியா, சீனா மீது 100% வரியை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.ரஷியாவை தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவிகித ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளை... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

நமது நிருபர்காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நமது சிறப்பு நிருபர்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு... மேலும் பார்க்க

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அ... மேலும் பார்க்க