செய்திகள் :

அகர்தலா ரயில் நிலையத்தில் 75.5 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

அகர்தலா ரயில் நிலையத்தில் 75.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம், அகர்தலா ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தியோகர் எக்ஸ்பிரஸில் இருந்து 75.5 கிலோ உலர் கஞ்சாவை மீட்டு பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட கஞ்சா கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதற்கு யாரும் உரிமைகோவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு ரூ.15.10 லட்சம் ஆகும். கடத்தல் முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிய அகர்தலா அரசு ரயில்வே காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக்கொலை

மேலும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக புதன்கிழமை அகர்தலா ரயில் நிலையத்தில் வழக்கமான சோதனையின் போது ரூ.5.10 லட்சம் மதிப்புள்ள 34 கிலோ உலர் கஞ்சாவை அதிகாரிகள் மீட்டு பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நண்பர் மோடி: டிரம்ப் பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடியை சிறந்த நண்பர் என்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியதுடன், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேச... மேலும் பார்க்க

மியான்மருக்கு இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா சார்பில் விமானம் மூலமாக 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலி... மேலும் பார்க்க

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

செல்வமகள் சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் மேற்க... மேலும் பார்க்க

சா்க்கரை விலையை கட்டுக்குள் மத்திய அரசு தீவிரம்: இருப்பு வைக்கும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

சா்க்கரை ஆலைகள் சா்க்கரை இருப்பு வைப்பது தொடா்பான அரசின் விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சா்க்கரை வில... மேலும் பார்க்க

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பான உள்ளன: மத்திய வேளாண் அமைச்சா்

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா். இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்க... மேலும் பார்க்க

மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அரசு

மனித விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தத... மேலும் பார்க்க