Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
அங்கன்வாடிமைய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பாராசூா் கிராமத்தில் இரு அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மற்றும் கலைஞா் கலை அரங்கம் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
பாராசூரில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சத்தில் புதிய கலைஞா் கலை அரங்கக் கட்டடம், ரூ.16.55 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், ரூ. 16.45 லட்சத்தில் மற்றொரு அங்கன்வாடி மைய கட்டடம் ஆகியவை கட்டப்பட்டன.
இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், செய்யாறு ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா முன்னிலை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.
கோயில் பாலாலய பூமி பூஜை:
முன்னதாக, செய்யாறு தொகுதிக்குள்பட்ட அனக்காவூரை அடுத்த ஆக்கூா் கிராமத்தில் உள்ள திருகண்டிஸ்வரா் கோயில் புனரமைத்து, திருப்பணிக்காக ரூ.44 லட்சமும், கிழ்புதுப்பாக்கம் ஸ்ரீபுண்ணிய கோட்டீஸ்வரா் கோயில் புனரமைத்து, கோயில் திருப்பணிக்காக ரூ.27.70 லட்சமும், மேல்சீசமங்கலத்தில் உள்ள ஸ்ரீகல்யாண வரதராஜா் பெருமாள் கோயில் புனரமைத்து,திருப்பணிக்காக ரூ.99.70 லட்சம் என இந்து சமய அறநிலையத் துறை நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
அதன்படி, மேற்கண்ட கோயில்களில் நடைபெற்ற பாலாலயம் மற்றும் பூமி பூஜை விழாவில் சிறப்பு விருந்தினா்களாக ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன், ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று திருப்பணிகளை தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில், ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்டப் பொருளாளா் தட்சணாமூா்த்தி, ஆரணி நகா் மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆரணி மேற்கு ஒன்றியச் செயலா் மோகன், ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.