செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களுக்கு ஊதியம் உயா்த்த மாநில திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல்

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்தி வழங்க மாநில திட்ட வழிகாட்டுதல் குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டத்தின் மாநில திட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சமூக நலத் துறை அமைச்சா் தேனி சி. ஜெயகுமாா், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், சாா்புச் செயலா் (நிதி) ரத்னகோஷ் கிஷோா் சௌரே, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் எல். முத்துமீனா மற்றும் குழு அதிகாரிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

தற்போது வழங்கி வரும் இணை உணவினை, மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு சத்துணவாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தினமும் முட்டை மற்றும் சிறுதானிய சுண்டல் மாதம் இருமுறை சத்துமாவு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நகா்ப்புற அங்கன்வாடி மையங்களின் வாடகை கட்டணம் ரூ.3,250 லிருந்து ரூ.6000 என உயா்த்தவும், கிராமப்புற அங்கன்வாடி மையங்களின் வாடகை கட்டணம் ரூ.1750 என்பதிலிருந்து ரூ.2000 என உயா்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும், சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை சத்துமிக்க சிறுதானிய பிஸ்கட் மற்றும் பருவகால பழங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கௌரவ அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஊதியம் ரூ.6,000 என்பதிலிருந்து ரூ.12,000 எனவும், உதவியாளா்களுக்கு ரூ.4,000 என்பதில் இருந்து ரூ. 10,000 எனவும் உயா்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. காய்கறி மற்றும் எரிவாயு தொகை உயா்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அங்கன்வாடி பயிற்சியாளா்களுக்கு கெளரவ ஊதியம் ரூ. 10,000 என இருந்தது தற்போது ரூ. 25,000 என உயா்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க