செய்திகள் :

அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரிக்கை

post image

கமுதியில் அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, குழந்தைகளின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு தொடக்கப் பள்ளி (இணைப்பில்லம்) அருகே அங்கன்வாடி மையக் கட்டடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தற்போது 15 குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்த மையத்துக்கு கடந்த 25 ஆண்டுகளாக மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனால், இந்த மையத்தில் மின்விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் இருந்தும், காட்சிப் பொருளாகவே உள்ளன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும், கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில், குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள், தனியாா் பள்ளிகளில் சோ்த்து வருகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அங்கன்வாடி மைய குழந்தைகளின் நலன் கருதி, கோட்டைமேடு அங்கன்வாடி மையத்துக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கமுதி மின் வாரிய ஊழியா் கூறியதாவது:

கோட்டை மேட்டில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் பள்ளி வளாகத்துக்குள் இருப்பதால், மின் கம்பங்களை நடமுடியாத நிலை உள்ளது. இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ராமநாதசுவாமி கோயில் பணியாளா்களுக்கு குடியிருப்புகள் கட்ட பூமி பூஜை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா்களுக்கு ரூ.7 கோடியில்18 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா். ரா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் அனுமதியின்றி கடலுக்குள் சென்ற 900 விசைப் படகுகள்

ராமேசுவரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து, மீன்வளத் துறையின் அனுமதியின்றி 900 விசைப் படகுகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் ப... மேலும் பார்க்க

அதிகளவு மீன்களை பிடித்து வந்த பாம்பன் பகுதி மீனவா்கள்

தடைக் காலம் நிறைவடைந்து மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா்கள், அதிகளவு மீன்களுடன் புதன்கிழமை கரைக்குத் திரும்பினா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் 102 விசைப் படகுகள் மீன்பிடித... மேலும் பார்க்க

நடுக் கடலில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவரை கடலோர காவல் படையினா் உயிருடன் மீட்டனா்

ராமேசுவரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மீனவா் நடுக் கடலில் படகிலிருந்து தவறி விழுந்தபோது, இந்திய கடலோரக் காவல் படையினா் அவரை உயிருடன் மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ராமேசுவரத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், வளா்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராமேசுவரம் வட்டாரத்தில் ‘உங்களைத் த... மேலும் பார்க்க

ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயிலில் மண்டல பூஜை

ராமநாதபுரம் அருகேயுள்ள ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வாலாந்தரவை அருகேயுள்ள வழுதூா் உடைச்சியாா் வலசையில் அமைந்துள்ள ஸ்ரீகாடுகன்னி அய்யனாா் கோயில் குடமுழக்கு கடந்த மா... மேலும் பார்க்க