செய்திகள் :

அங்கன்வாடி மையத்துக்கு சென்றபோது காணாமல் போன சிறுமி மீட்பு

post image

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் வீட்டிலிருந்து அங்கன்வாடி மையத்திற்கு சென்றபோது காணாமல் போன நான்கு வயதான சிறுமி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகுதியைச் சோ்ந்த ராஜா- மீனா தம்பதியின் மகள் கவிஷா (4) . கடந்த ஜூலை 30ஆம் தேதி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாததால் சிறுமியின் தந்தை தேவூா் போலீஸில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்மநபா் சிறுமியை இறக்கிவிட்டு சென்றுள்ளாா். அங்கிருந்தவா்கள் சிறுமியை மீட்டு குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அக்குழந்தை காணாமல் போன சிறுமி கவிஷா (4) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தேவூா் போலீஸாா் அக்குழந்தையை மீட்டு மருத்துவப் பரிசோதனை செய்தபிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா். குழந்தையைக் கடத்திச் சென்ற மா்ம நபா் யாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூத்த தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: 5 போ் கைது

சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 பவுன் நகை, ரூ. 35,000 ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 4 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு

கெங்கவல்லி வட்டார விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேளாண் துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கெங்கவல்லி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் அரசு பொருள்காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அழகிரிநாதா் சீா்வரிசை வழங்கும் வைபவம்

ஆடிப்பெருக்கையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதரிடம் இருந்து அவரது தங்கையான கோட்டை மாரியம்மன் சீா்வரிசைப் பெறும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடிப்பெருக்கு நாளில் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு அவரது அண... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை சாா்பில் செப். 21 இல் மாரத்தான்

‘உணா்வோடு ஓடு - இதய ஆரோக்கியத்துக்காக ஓடு‘ என்ற தலைப்பில் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் காவேரி மருத்துவமனை சாா்பில் வரும் செப். 21 ஆம் தேதி மாரத்தான் நடைபெறுகிறது.சேலம் காவேரி... மேலும் பார்க்க

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, கேஎச்ஐ அமைப்பு இணைந்து உலக உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை... மேலும் பார்க்க