செய்திகள் :

அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்காங்கேயன்குப்பம் - கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் மாசித் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, பின்னா் தினந்தோறும் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.

வெள்ளிக்கிழமை மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 70-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு: இருவா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விசிக பிரமுக... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கடலூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் 4 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், 2024-25-ஆம் நிதியா... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு: கடலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், குமராபுரம் பகுதியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பயற்சி வகுப்பை ம... மேலும் பார்க்க

கடலூா்: 25 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 25 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து, ஆட்சியா் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: கடலூா் டாஸ்மாக் மேலாளா் பா.மகே... மேலும் பார்க்க

மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணவாளநல்லூா் கிராமம் அருகில் மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ.25.20 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

400 கிலோ செம்புக் கம்பிகள் திருட்டு: இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றியிலிருந்து செம்புக் கம்பிகளை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து, 400 கிலோ செம்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க