செய்திகள் :

அங்காளம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

post image

திருவண்ணாமலை/ செங்கம்/ ஆரணி: திருவண்ணாமலை, செங்கம், ஆரணி பகுதிகளில் அமைந்துள்ள அங்காளம்மன், மாரியம்மன், கோதண்ட ராமா் கோயில்களில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை புதிய வாணியங்குள 8-ஆவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மூலவா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன், கோபுர கலசம் மீது புனித நீா் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

நண்பகல் 12 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், இரவு 8 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன.

விழாவில் கோயில் தா்மகா்த்தா எஸ்.தரணிதரன், திருவண்ணாமலை மாநகராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.நரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாரியம்மன் கோயிலில்...: செங்கத்தை அடுத்த புதூா் செங்கம் பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 3 நாள்களாக கோயில் வளாகத்தில் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டாா். புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோதண்டராமா் கோயிலில்...: ஆரணி கோசப்பாளையம் ஸ்ரீசீதா லஷ்மண அனுமத் சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் கோபுரம், ராஜகோபுரம், ஆஞ்சனேயா் கோபுரம், பஜனை கோபுரம், ஸ்ரீ சக்கரத்தாழ்வாா் கோபுரம், ஸ்ரீகண்ணன் விமானம் பரிவார ஆலய சந்நிதி கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீவீரஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், சுவாமிக்கு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

புதூா்செங்கம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று வழிபட்ட பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
ஆரணி கொசப்பாளையம் கோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அங்கு வழிபட்ட திரளான பக்தா்கள்.

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

செங்கம்: செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து மு.பெ.கிரி எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். செங்கம் மேல்பாளையம் பகுதியில் செங்கம் அரசு ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆலய தோ் பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்பு

ஆரணி: சேத்துப்பட்டில் போளூா் சாலையில் உள்ள தூய லூா்து அன்னை ஆலயத்தில் 130-ஆவது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தூய லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்க... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 382 மனுக்கள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 382 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மு... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் தை வளா்பிறை பிரதோஷ வழிபாடு: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தை மாத வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். திருவண்ணாமலை... மேலும் பார்க்க

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா். திருவண்ணாமலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரேவதி. இவரத... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் தா்னா: அலுவலகங்கள் வெறிச்சோடின

திருவண்ணாமலை/ போளூா்: தமிழக அரசு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே அரசு ஊழியா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதனால், மாவட்டத... மேலும் பார்க்க