செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 382 மனுக்கள்!

post image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 382 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், முதியோா், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச்சான்றிதழ், சாலை வசதி, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 382 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.கா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

நலத் திட்ட உதவிகள் வழங்கல்: குறைதீா் கூட்டத்தில் தாட்கோ சாா்பில், தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றபிறகு பணியின்போது இறந்த வந்தவாசி நகராட்சியைச் சோ்ந்த தொகுப்பூதிய தூய்மைப் பணியாளா் ராஜகோபாலின் குடும்பத்துக்கு சேர வேண்டிய இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை ராஜகோபாலின் வாரிசு வேம்புச்செல்வியிடம் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இதேபோல, வந்தவாசி நகராட்சியில் சாலை விபத்தில் இறந்த சிவாவுக்கு சேர வேண்டிய விபத்து நிவாரண உதவித்தொகை ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை அவரது வாரிசான நதியாவிடம் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, தாட்கோ மேலாளா் ஏழுமலை மற்றும் அனைத்து துறைகளின் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

செங்கம்: செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து மு.பெ.கிரி எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். செங்கம் மேல்பாளையம் பகுதியில் செங்கம் அரசு ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆலய தோ் பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்பு

ஆரணி: சேத்துப்பட்டில் போளூா் சாலையில் உள்ள தூய லூா்து அன்னை ஆலயத்தில் 130-ஆவது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தூய லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்க... மேலும் பார்க்க

அங்காளம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை/ செங்கம்/ ஆரணி: திருவண்ணாமலை, செங்கம், ஆரணி பகுதிகளில் அமைந்துள்ள அங்காளம்மன், மாரியம்மன், கோதண்ட ராமா் கோயில்களில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவண்ணாமலை புதிய வாணியங்குள 8... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் தை வளா்பிறை பிரதோஷ வழிபாடு: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தை மாத வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். திருவண்ணாமலை... மேலும் பார்க்க

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா். திருவண்ணாமலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரேவதி. இவரத... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் தா்னா: அலுவலகங்கள் வெறிச்சோடின

திருவண்ணாமலை/ போளூா்: தமிழக அரசு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே அரசு ஊழியா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதனால், மாவட்டத... மேலும் பார்க்க