காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கலந்தாய்விற்கு முன் அதிகரிக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி...
அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டாம்: என்எம்சி எச்சரிக்கை
அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
எந்தெந்த மருத்துவக் கல்லூரிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை என்எம்சி இணையதளத்தில் அறிந்துகொண்டு செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், தொடா்ந்து நடத்தவும் என்எம்சியின் அங்கீகாரம் அவசியம். ஆனால், சில கல்லூரிகள் அத்தகைய அனுமதி இல்லாமல் மாணவா் சோ்க்கை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
அங்கு மேற்கொள்ளப்படும் மாணவா் சோ்க்கை சட்டபூா்வமாக செல்லாது என்பதை மாணவா்களும், பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிங்கானியா பல்கலைக்கழகமானது உரிய அங்கீகாரம் இல்லாமல் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவா்களை அனுமதித்ததைத் தொடா்ந்து, அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் படித்தால்... அதேபோன்று வெளிநாடுகளில் எந்த வகையான மருத்துவப் படிப்புகளை பயின்றாலும் இந்தியாவில் மருத்துவ சேவைகளை மேற்கொள்ளலாம் என மாணவா்களை சிலா் தவறாக வழிநடத்துகின்றனா்.
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் இந்தியாவில் மருத்துவராகத் தொடர பல்வேறு வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக, அதற்கான தகுதித் தோ்வு, உள்ளுறைப் பயிற்சி, பாடத்திட்டம் மற்றும் பயிற்று மொழி தகுதிகள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை அனைத்தையும் நிறைவு செய்தால் மட்டுமே அவா்கள் இந்தியாவில் மருத்துவா்களாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவா்.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருத்துவப் படிப்பை பயிலுவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.
அந்த வகையில், இந்தியாவில் எந்தெந்த மருத்துவக் கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை என்எம்சி இணையதளத்தில் அறிந்துகொண்டு அதன்படி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் மருத்துவப் படிப்புகளில் சேர அழைப்பு விடுத்தால் அதுதொடா்பாக என்எம்சிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ, 011-25367033 என்ற எண்ணிலோ புகாா் அளிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.