செய்திகள் :

அசாம் சுரங்க விபத்து! 2வது தொழிலாளியின் உடல் மீட்பு!

post image

வடகிழக்கு மாநிலமான அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளிகளில், மற்றொரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜன.6 அன்று உம்ராங்சோவின் 3 கிலோ எனும் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தினுள் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, அதனுள் இருந்த 9 தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, அன்றிலிருந்து அந்த தொழிலாளிகளை மீட்க இந்திய ராணுவப்படை, கடற்படை, தேசிய மற்றும் மாநில மீட்புப் படையைச் சார்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில், கடந்த ஜன.8 அன்று 21 பாரா நீச்சல் வீரர்கள் சுரங்கத்தில் சூழ்ந்துள்ள நீரினுள் நீந்தி சென்றப்போது 85 வது அடி ஆழத்தில் பலியான நேபாளத்தைச் சேர்ந்த கங்கா பகதூர் செஸ்தோ என்ற தொழிலாளியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதையும் படிக்க:பெங்களூரு சிறையில் தீவிரவாத செயல்: 9-ஆவது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதன் பின்னர், மீதமுள்ள 8 தொழிலாளிகளின் நிலைக்குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் அந்த சுரங்கத்தினுள் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற ’கோல் இந்தியா’ சார்பில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து நிமிடத்திற்கு சுமார் 500 கலோன் அளவிலான தண்ணீரை வெளியேற்றக் கூடிய அதிக அழுத்தம் கொண்ட பம்ப் கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த 6வது நாளான இன்றும் (ஜன.11) மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அந்த சுரங்கத்தின் ஆழத்தில் நீந்தி சென்ற தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மற்றொரு தொழிலாளியின் உடலை மீட்டுள்ளனர். பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் டிமா ஹசாவோவை சேர்ந்த லிகென் மகர் (வயது 27) என்பது தெரியவந்தது.

முன்னதாக, அந்த சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளிகளில் 3 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் 2 வது நபரது உடல் மீட்டு வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.

சுமார், 340 அடி ஆழமுள்ள அந்த சுரங்கத்தில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற கோல் இந்தியா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களில் மூலமாக இதற்காகவே பிரத்யேக இயந்திரஙகள் கொண்டுவரப்பட்டு நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. தற்போது வரையில் 7 மீட்டர் அளவுக்கு நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணி: ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.63% வாக்குகள் பதிவாகியுள்ளன.ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு த... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:05-02-2025: தமி... மேலும் பார்க்க

இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ?: அண்ணாமலை கேள்வி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையால் அந்த பெண்ணின் கூச்சல் கேட்டு நல்லவர் ஒருவர் காவல்துறையை அழைத்ததால், அந்த பெண் தப்பிய நிலையில், நம் சகோதரிகளுக்கு பாதுகாப்... மேலும் பார்க்க

டாஸ்மாக்கில் கள்ளச்சாரயம்... திமுக வெட்கப்பட வேண்டும்: இபிஎஸ்

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது பற்றி கள்ளச்சாராய விற்பனை தன்னுடைய எக்ஸ் தளப் ப... மேலும் பார்க்க

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக பாஜகவை திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் கூடுவோம்: செல்வப்பெருந்தகை

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் நாளை(பிப். 6) அணிதிரள்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் கோயில... மேலும் பார்க்க