செய்திகள் :

அசாம் சுரங்க விபத்து! 2வது தொழிலாளியின் உடல் மீட்பு!

post image

வடகிழக்கு மாநிலமான அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளிகளில், மற்றொரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜன.6 அன்று உம்ராங்சோவின் 3 கிலோ எனும் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தினுள் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, அதனுள் இருந்த 9 தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, அன்றிலிருந்து அந்த தொழிலாளிகளை மீட்க இந்திய ராணுவப்படை, கடற்படை, தேசிய மற்றும் மாநில மீட்புப் படையைச் சார்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில், கடந்த ஜன.8 அன்று 21 பாரா நீச்சல் வீரர்கள் சுரங்கத்தில் சூழ்ந்துள்ள நீரினுள் நீந்தி சென்றப்போது 85 வது அடி ஆழத்தில் பலியான நேபாளத்தைச் சேர்ந்த கங்கா பகதூர் செஸ்தோ என்ற தொழிலாளியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதையும் படிக்க:பெங்களூரு சிறையில் தீவிரவாத செயல்: 9-ஆவது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதன் பின்னர், மீதமுள்ள 8 தொழிலாளிகளின் நிலைக்குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் அந்த சுரங்கத்தினுள் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற ’கோல் இந்தியா’ சார்பில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து நிமிடத்திற்கு சுமார் 500 கலோன் அளவிலான தண்ணீரை வெளியேற்றக் கூடிய அதிக அழுத்தம் கொண்ட பம்ப் கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த 6வது நாளான இன்றும் (ஜன.11) மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அந்த சுரங்கத்தின் ஆழத்தில் நீந்தி சென்ற தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மற்றொரு தொழிலாளியின் உடலை மீட்டுள்ளனர். பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் டிமா ஹசாவோவை சேர்ந்த லிகென் மகர் (வயது 27) என்பது தெரியவந்தது.

முன்னதாக, அந்த சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளிகளில் 3 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் 2 வது நபரது உடல் மீட்டு வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.

சுமார், 340 அடி ஆழமுள்ள அந்த சுரங்கத்தில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற கோல் இந்தியா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களில் மூலமாக இதற்காகவே பிரத்யேக இயந்திரஙகள் கொண்டுவரப்பட்டு நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. தற்போது வரையில் 7 மீட்டர் அளவுக்கு நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் நபரின் உடலை தோண்டியெடுப்பது தற்காலிகமாக நிறுத்தம்!

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டியெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நெய்யத்திங்கராப் பகுதியின் ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 50 ஏக்கர் அளவிலான போதைச் செடிகள் அழிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோதமாக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகளை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பிரண் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் காவ... மேலும் பார்க்க

மனைவியைத் துன்புறுத்தியவர் திட்டமிட்டு கொலை! விசாரணையில் திருப்பம்!

மகாராஷ்டிரம், தானேயில் தன் மனைவியைத் துன்புறுத்தியவரைத் திட்டமிட்டு கொலை செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்,கடந்த ஜன.11 சுகந்த் ஷத்ருகனா பரிதா (29) என்பவர் நரேஷ் ஷம்பு பகத் வீட்டில் உயிரிழந... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்கு மின்சாரம் தரும் "முட்டை!” பதற வைத்த தனியார் நிறுவன அறிவிப்பு!

என்ரோன் எனும் அமெரிக்க தனியார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு பலரையும் திகைக்க வைத்துள்ளது! என்ரோன் எக் (Enron Egg) எனும் புதிய தயாரிப்பை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம். உலகின் ஆற்றல் நெருக... மேலும் பார்க்க

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1452.97 கி.மீ. நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடியும் அச்சாலைகளின் 5 ஆண்டு ... மேலும் பார்க்க

தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: விஜய் வாழ்த்து!

பொங்கல் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் நடிகர் விஜய், ”பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் ... மேலும் பார்க்க