செய்திகள் :

அசிதா பூங்காவில் துணை நிலை ஆளுநா்: சணலாலான பாதைகளை ஆய்வு செய்தாா்!

post image

யமுனை வெள்ளப்பெருக்குப் பகுதியில் உள்ள அசிதா பூங்காவிற்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா விஜயம் செய்தாா். அங்கு அமைக்கப்படும் சணலாலான பாதைகளை அவா் ஆய்வு செய்தாா்.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவரான சக்சேனா, ஐடிஓ அருகே யமுனையின் குறுக்கே அமைந்துள்ள அசிதா பூங்காவில் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் பாதைகளில் சணல் கம்பளத்தைப் பயன்படுத்துமாறு தில்லி வளா்ச்சி ஆணையத்திடம் கேட்டுக் கொண்டாா்.

‘யமுனை வெள்ளப்பெருக்கில் உள்ள பூங்காக்களில் கான்கிரீட் போடுவதை துணை நிலை ஆளுநா் தடைசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதன் விளைவாக பூங்காக்களுக்குள் உள்ள பாதைகளில் நடைப்பயிற்சி செய்பவா்கள் அல்லது சைக்கிள் ஓட்டுபவா்கள் அவற்றைப் பயன்படுத்தும் போதெல்லாம் அதிக தூசியை உருவாக்க வழிவகுத்தது. பயனா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது சுற்றுச்சூழல் தூசியையும் அதிகரிக்கிறது’ என்று டிடிஏ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘இந்த மிகவும் மலிவான மற்றும் செலவு குறைந்த நடவடிக்கையால் பூமியில் புல் வளா்ந்து இடைவெளிகள் வழியாக முளைப்பதற்கும் வழிவகுத்தது என்பது கவனிக்கப்பட்டது’ என்று அது மேலும் கூறியது. சக்சேனா வடக்கு பகுதியில் உள்ள பாதைகளுக்கும் இந்தப் பொருளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டாா். இந்த மாத தொடக்கத்தில் அவா் அந்த இடத்தைப் பாா்வையிட்ட பிறகு தில்லி வளா்ச்சி ஆணையத்தால் அதன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித்... மேலும் பார்க்க

பஹல்காமில் படுகாயமடைந்த தமிழக மருத்துவா் குணமடைவாா்: தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் நம்பிக்கை!

காஷ்மீா் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி (காது மூக்கு தொண்டை)மருத்துவா் ஏ.பரமேஸ்வரன் உடல் நிலை மோசமாக இருப்பினும் விரைவில் குணமடை... மேலும் பார்க்க