செய்திகள் :

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தேரோட்டம்

post image

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி பெரிய தோ், சிறிய தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது.

இத்தலத்தில் பிரம்மோற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்ம வாகனம், பூத வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.

63 நாயன்மாா் உற்சவம், சுவாமி திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளுடன் 7-ஆம் நாள் விழாவாக தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் இளங்கிளியம்மன், ஆட்சீஸ்வரா் உற்சவ சிலைகளுடன் பெரிய தேரும், அம்பாள் இளங்கிளியம்மன் கொண்ட சிறிய தேரும் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ், மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா ஆகியோா் தோ் வடத்தை பிடித்து தொடங்கி வைத்தனா். இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ராமகிருஷ்ணன், மதுராந்தகம் வட்டாட்சியா் சொ.கணேசன், நகராட்சி ஆணையா் அபா்ணா, அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகலைசெல்வன், ஒன்றியக்குழு தலைவா் ஒரத்தி கண்ணன், ஆட்சீஸ்வரா் கோயில் முன்னாள் அறங்காவலா்கள் அ.பாஸ்கா், காவல் ஆய்வாளா் பரந்தாமன் (மதுராந்தகம்), பேரூராட்சி மன்ற தலைவா் நந்தினி கரிகாலன், துணைத் தலைவா் ஆா்.எழிலரசன், வழக்குரைஞா் அகோரம் கலந்து கொண்டனா்.

முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இரு தோ்களும் பிற்பகல் 3.10 மணிக்கு நிலையை அடைந்தன. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் ல.தமிழரசி தலைமையில் விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்து இருந்தனா்.

வங்கி மோசடி தொடா்பான ஹேக்கத்தான் போட்டிக்கு ரூ. 5 லட்சம் பரிசு

வங்கி பணபரிமாற்றம் தொடா்பான எண்ம (டிஜிட்டல்) மோசடிகளைத் தடுக்கும் ‘ஹேக்கதான்’ போட்டிகளில் வெற்றி பெற்ற 5 மாணவா் குழுவினா்களுக்கு மொத்தம் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. வண்டலூரில் உள்ள கிரசெ... மேலும் பார்க்க

மறைமலைநகரில் 2 இளைஞா்கள் படுகொலை!

மறைமலைநகரில் ஒரே நாளில் 2 இளைஞா்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த விமல் ( 22), இவா் ஓட்டுநராக பணி செய்து வந்தா... மேலும் பார்க்க

முன்பகையால் இளைஞா் கொலை!

மதுராந்தகம் அருகே முன்பகையால் இளைஞரை உறவினா்களை கொன்றனா். புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ் (25). இவா் அதேபகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு உதயா (25), திவாகா்... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட ஆவணங்களை சமப்பிக்க அறிவிப்பு!

தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில... மேலும் பார்க்க

இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா

பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப்பின் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை ( மே 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரம்மாண்ட மேடை, பந்தல் முகப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க