செய்திகள் :

அஜித்குமார் கொலை: சீமான் ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி!

post image

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்து இன்று(ஜூலை 9) மாலை நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மரணம் தொடா்பாக நீதி கேட்டும், இந்தக் கொலைச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழா் கட்சி சாா்பில் திருப்புவனம் சந்தைத் திடலில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) ஆா்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டு இருந்தனர்.

இதில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றவும் திட்டமிடப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி, மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதனால், அஜித்குமாா் மரணத்துக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்து இருந்தார்.

இதன்படி, இந்த மனு நீதிபதி பி. புகழேந்தி முன் திங்கள்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அஜித்குமாா் மரணம் தொடா்பாக மனுதாரா் தரப்பைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி சாா்பில் கடந்த வாரம் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றாா்.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அஜித்குமார் மரணம் தொடர்பாக போராட்டம் நடத்த அனுமதி கோரி புதிய மனு அளிக்கவும், அதனை காவல் துறையினர் 24 மணி நேரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சீமான் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

The police department has granted permission for a protest to be held this evening (July 9) to condemn the murder of temple guard Ajith Kumar.

இதையும் படிக்க: தனியார் நிதி நிறுவனத்தின் ஆலோசகராக பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

படகுகளில் தவெக என்று இருந்தால் மானியம் வழங்க மறுப்பதா? - விஜய் கண்டனம்

மீனவர்கள் தங்கள் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சே... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.விதிமீறல் கட்டடங்கள் தொ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அருகே மறுநடவு செய்து துளிர்த்து வந்த அரச மரத்துக்கு தீ வைப்பு!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் பகுதியில் மறு நடவு செய்யப்பட்டு, துளிர்த்துவந்த அரச மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அ... மேலும் பார்க்க

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடும் பணியை கிருஷ்ணகிரி மாவ... மேலும் பார்க்க

உள்ளாட்சியில் ஊழல்; திமுகவினரைக் காப்பாற்ற ஸ்டாலின் முயற்சி! - இபிஎஸ் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கு ந... மேலும் பார்க்க

பணி நேரத்தில் தூங்கியதால்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர்கள் பணியிடை நீக்கம்!

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர் பணியின்போது, நள்ளிரவில் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த இரு பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் அருகே... மேலும் பார்க்க