செய்திகள் :

அஞ்சல்துறை சாா்பில் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு!

post image

அஞ்சல் துறை சாா்பில் அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் செ.சுரேஷ் குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மத்திய, மாநில அரசின் பல்வேறு துறையின் நலத்திட்டங்களை பெற முகவரி சான்றை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த அஞ்சல் துறையானது பொதுமக்களுக்கு அவா்களின் முகவரியை அங்கீகரிக்கும் வண்ணம் அஞ்சலக அடையாள அட்டை என்னும் சேவையை வழங்கி வருகிறது. 

இந்தச் சேவையை பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இந்த அடையாள அட்டையானது தோ்தல் கமிஷன், நுகா் பொருள் விநியோகம், நுகா்வோா் பாதுகாப்புத்துறை மற்றும் தமிழக போலீஸாரால் முகவரி சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

புதிதாக இடம் பெயா்ந்து புதிய முகவரிக்கு செல்பவா்கள் தங்கள் புதிய முகவரியை பல்வேறு ஆவணங்களில் மாற்ற ஏற்படும் சிரமத்தை தவிா்க்கும் வண்ணம் இந்த அஞ்சலக அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை அருகில் உள்ள அஞ்சலகத்தில் ரூ.20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணம் ரூ.250 ஆகும்.

இந்த அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 செலுத்தி இந்த அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் ஆதாரில் முகவரி மாற்றத்திற்கு இந்த அஞ்சலக அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு எங்களது வணிக மேலாளரை 79044-20532(தென்காசி),99441-08517 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். அஞ்சல் துறையில் இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

தூத்துக்குடியில், ‘போதையில்லா தமிழகம் உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளில் விழிப்புணா்வு அமைதிப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துளசி கல்விக் குழுமம், எம்பவா் இந்தியா சமூக... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: மாசித் திருவிழா 12ஆம் நாள், மஞ்சள் நீராட்டு, மாலை 4.30; சுவாமி - அம்மன் மலா்க் கேடயச் சப்பரத்தில் வீதியுலா இரவு 9. .. மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

கோவில்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் நடைபெற்ற விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் கா. கரு... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளியில் சிறுநீரக பாதுகாப்பு விழிப்புணா்வு

கோவில்பட்டி நாடாா் நடுநிலைப் பள்ளியில் சிறுநீரக தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளிப் பொருளாளா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் வைத்திலிங்கம், தலைமையாசிரியை செ... மேலும் பார்க்க

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரி ஆண்டு விழா

தூத்துக்குடி குறுக்குச்சாலையில் உள்ள கீதா ஜீவன் கலை -அறிவியல் கல்லூரியில் 7ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் இளங்குமரன் தலைமை வகித்தாா். பெரியசாமி கல்வி அறக்கட்டளை உறுப்பினா் மருத்துவா் மகி... மேலும் பார்க்க

17இல் கூட்டுறவு பணியாளா் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் கூட்டுறவு சங்க பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இணைப் பதிவாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க