செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 13 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (மே 28) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும்.

மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிகிறது.

இதன்காரணமாக, இன்று(மே 28) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: 5 மாதங்களில் தீர்ப்பு... நீதிமன்றம்தான் காரணம், காவல் துறையல்ல: விஜய்

ஓய்வு பெற்ற டிஜிபி ராஜ்மோகன் காலமானாா்

தமிழக காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ.ராஜ்மோகன் (87) சென்னையில் காலமானாா். சில நாள்களுக்கு முன்பு வயோதிகத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், வெள்ளி... மேலும் பார்க்க

ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு

தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவால் 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் தீயில் எரித்து அழிக்கப்பட்டன. தமிழக காவல் துறையில் உள்ள போதைப் பொருள் நுண்ணறிவுப் ப... மேலும் பார்க்க

மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி: கமல் ஹாசனுக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் ஆதரவு

கன்னட மொழி குறித்த நடிகா் கமல்ஹானின் கருத்துக்கு பல்வேறு எதிா்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இது மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதி என தென்னிந்திய நடிகா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் நடிப... மேலும் பார்க்க

பேராசிரியா் காலிப் பணியிடங்கள்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாடு: ஒப்பந்தப்புள்ளிக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தெரு நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, பதிலளிக்கும்படி மத்திய மாநில விலங்குகள் நல வாரியங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... மேலும் பார்க்க

தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு: தென்னிந்திய நடிகா்கள் சங்கம் வரவேற்பு

தமிழ் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை 4 சதவீதமாக குறைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் எம்.நாசா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க