செய்திகள் :

அடையாளத்தின் அடிப்படையில் 6 பயணிகள் சுட்டுக்கொலை! பிரதமர் கண்டனம்!

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் 6 பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பலூசிஸ்தானின் குவடார் மாவட்டத்தின் கலாமத் பகுதியில் நேற்று (மார்ச் 26) நள்ளிரவு கராச்சியிலிருந்து வந்த பேருந்தை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல், பயணிகளின் அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அதில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து வந்த 5 பேரை பேருந்திலிருந்து கீழே இறக்கி அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், அவர்கள் 5 பேரும் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு பயணியும் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பலியானோரது எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து உள்ளூர் ஊடங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பயணிகளின் அடையாள அட்டையை சோதனை செய்து அவர்களை சுட்டுக்கொன்ற நபர்கள் மேலும் 3 பேரை கடத்தி சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது வரை இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், கடந்த காலங்களில் பஞ்சாப் மாகாண மக்களைக் குறிவைத்து பலூச் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தின் மூலமாக கண்டனம் தெரிவித்துள்ள பலூசிஸ்தான் முதல்வர் ஷர்ஃபராஸ் புக்தி, அப்பாவி பயணிகளை தங்களது அடையாளத்தின் அடிப்படையில் கொலை செய்திருப்பது கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் 11 அன்று பலூசிஸ்தானில் ஜாஃபர் விரைவு ரயிலை சிறைப்பிடித்து பலூச் லிபரேஷன் ஆர்மியின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர்.

பின்னர், மறுநாள் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பலூசிஸ்தானில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க:தென் கொரிய காட்டுத் தீ: அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்...போராடும் வீரர்கள்!

ஹைதி: முக்கிய நகரத்தைத் தாக்கி 500 சிறைக் கைதிகளை விடுவித்த குழுக்கள்!

ஹைதி நாட்டின் முக்கிய நகரத்தில் தாக்குதல் நடத்திய குற்றவாளி குழுக்கள் அங்குள்ள சிறையிலிருந்து சுமார் 500 சிறைக் கைதிகளை விடுவித்துள்ளனர். மத்திய ஹைதியின் மிரேபலாசிஸ் நகரத்தில் இரண்டு வெவ்வேறு குற்றவாள... மேலும் பார்க்க

போட்டியின் நடுவே மயங்கிய முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மரணம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் போட்டியின் நடுவே மயங்கி விழுந்த நைஜீரிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் தேசிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குத்துச்சண்டை ச... மேலும் பார்க்க

எல்லையைக் கடந்து பரவும் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து! காப்பாற்றுமா அரசின் திட்டம்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.தெற்கு சூடான் நாட்டுடனான எல்லையில் எத்தியோபியாவின் தென் மேற்கிலுள... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீரர்!

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கடந்... மேலும் பார்க்க

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, ... மேலும் பார்க்க

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க