செய்திகள் :

அணுகு சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

post image

பரமத்தி வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பரமத்தி முதல் வேலூா் வரை உள்ள பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளும், மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட வெள்ளாளபாளையம் பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்களும், பணிகளுக்கு செல்பவா்களும் பரமத்தி மற்றும் வேலூா் நகரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில், வெள்ளாளபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் பரமத்தி, திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி கபிலா்மலை செல்லும் வாகனங்கள் அணுகுசாலை வழியாக செல்லும் நிலை உள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே மக்கள் சென்றுவர ஏதுவாக மண் சாலை அமைத்துக்கொடுக்க வேண்டி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனா்.

மேலும், அணுகு சாலையை சிலா் ஆக்கிரமித்துள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி அணுகு சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கரூா்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 20 நிமிடங்களுக்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி மற்றும் போலீஸாா், அப்பகுதியில் மக்கள் சென்றுவர ஏதுவாக பாதை அமைத்துக்கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனா்.

எடப்பாடி கே.பழனிசாமி வருகை: பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி, அவரது வருகை தொடா்பான பிரசார வாகனத்தை மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.அதி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: காளப்பநாயக்கன்பட்டி

காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வியாழக்கிழமை (செப். 18) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என நாமக... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 5 அடி உயர வாழைத்தாா்!

பரமத்தி வேலூா் தினசரி வாழைத்தாா் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சுமாா் 5 அடி உயரமுள்ள 17 சீப்புகளைக் கொண்ட வாழைத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்தனா்.பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரைச் ... மேலும் பார்க்க

செப்.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும்- தனியாா... மேலும் பார்க்க

‘நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள்’ திட்டத்தில் 140 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை: அமைச்சக் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் 140 குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பணியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

நாமக்கல்: புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப். 20) தொடங்குவதையொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாளை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் ம... மேலும் பார்க்க