செய்திகள் :

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்: ரஷிய அதிபா் புதின்

post image

அணு ஆயுதங்களை பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் தனது இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ரஷிய அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் தவறை ரஷியா செய்ய வேண்டும் என்று பல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் தனது இலக்குகளை எட்ட ரஷியாவிடம் மிக அதிகமாக பலம் உள்ளது.

போா் ஏற்பட்டதற்கான காரணங்களை களைதல், நீடித்து நிலைக்கும் அமைதிக்கு நிபந்தனைகளை உருவாக்குதல், ரஷியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஏற்பாடுகள் ஆகியவையே அந்த இலக்குகளாகும்.

உக்ரைனில் ரஷிய மொழி பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாத்தல், நீடித்து நிலைக்கும் அமைதி ஆகியவையே உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின் முக்கிய விளைவாக இருக்க வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, போப் 14-ஆம் லியோ பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சந்தித்துப் பேசினாா்.

இன்று டிரம்ப்-புதின் பேச்சு

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக புதினுடன் திங்கள்கிழமை தொலைபேசியில் பேச உள்ளதாக ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் டிரம்ப் தெரிவித்தாா். புதினுடன் பேசிய பின்னா் ஸெலென்ஸ்கி மற்றும் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பேச உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தாா்.

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 57 பேர் பலி!

நைஜீரியாவின் போர்னோர் பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 57 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பார்க்க

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கமானது, இன்று காலை 8.54 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் பார்க்க

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு (82 வயது) தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய பைடன் சிறுநீர... மேலும் பார்க்க

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நி... மேலும் பார்க்க

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவா்களுக்கு ஏராளமான தமிழா்கள் அஞ்சலி செலுத்தினா். இலங்கையின் வடக்கு மற்றும... மேலும் பார்க்க

புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு! திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி!

வாடிகன் புனித பீட்டா் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலாகல நிகழ்வில் புதிய போப்பாக (கத்தோலிக்க திருச்சபையின் தலைவா்) 14-ஆம் லியோ அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டாா். தொடா்ந்து, உலக அமைதியின்... மேலும் பார்க்க