செய்திகள் :

அண்ணா பல்கலை., விவகாரம்: "பத்திரிகையாளர்களின் போன்கள் பறிமுதல் செய்ய அவசியம் என்ன?"- இபிஎஸ் கேள்வி

post image

சமீபத்தில் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி சம்பவங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரை இந்த விவகாரத்தைத் தீவிரமாகப் பேசிவந்தனர். இந்த வழக்கில் நேர்மையான விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், இந்த வழக்குச் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன? FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனைப் பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.

உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ எனச் சந்தேகம் எழுகிறது. 'யார் அந்த சார்' என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற, முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொணரும்! 'யார் அந்த சார்' என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

வேங்கை வயல் விவகாரம்: `வன்கொடுமை வழக்கல்ல...' - சிபிசிஐடி மனுவை ஏற்ற நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் ந... மேலும் பார்க்க

"மாஞ்சோலை படுகொலை மாதிரி இந்த போராட்டமும் மாறிடக்கூடாது" - தொடரும் மாஞ்சோலை பெண்களின் அறப்போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என ஐந்து எஸ்டேட் பகுதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள சுமார் 8,373.57 ஏக்கர் நிலத்தை, 'பாம... மேலும் பார்க்க

Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் பேச்சும் விளக்கமும்

"பழங்குடியினர் நலத்துறையைப் பிராமணர்கள், நாயுடுக்கள் போன்ற உயர் பிரிவினர் நிர்வகிக்க வேண்டும்" என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியுள்ளது... மேலும் பார்க்க

Mission 2026: One Year of Vijay's TVK Party - Positives & Negatives Report

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. விஜய்யைச் சுற்றி எப்போதுமே அரசியல் சர்ச்சைகள் சுழன்றுகொண்டேதான் இருந்திருக்கின்றன. ஆனாலும், திடீரென கடந்த பிப்ரவரி 2 ... மேலும் பார்க்க

TVK: "பாஜக, திமுகவை எதிர்ப்பதுதான் கொள்கை என்பதை ஏற்று முடியாது" - தவெக குறித்து சரத்குமார் பளீச்

"நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட சிறப்பான பட்ஜெட் என்றுதான் பார்க்க வேண்டும்" என்ற பா.ஜ.க பிரமுகரும் நடிகருமான சரத்குமார் மத்திய பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சரத்க... மேலும் பார்க்க