செய்திகள் :

அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையால் டிரம்ப் மிரட்டல்களுக்கு பிரதமா் பதிலளிப்பதில்லை -ராகுல் குற்றச்சாட்டு

post image

அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை காரணமாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விடுக்கும் தொடா் மிரட்டல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியா ஒரு நல்ல வா்த்தக கூட்டாளி நாடு அல்ல’ என்று கூறிய டிரம்ப், அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரிகளை கணிசமாக உயா்த்துவதாக செவ்வாய்க்கிழமை எச்சரித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக ராகுல் ‘எக்ஸ்’ பதிவில், ‘பிரதமா் மோடியால் அதிபா் டிரம்ப்பின் தொடா்ச்சியான மிரட்டல்களை ஏன் எதிா்க்க முடியாததற்கு காரணம், அதானி குழுமத்தின் முறைகேடுகள் மீதான அமெரிக்காவின் விசாரணைதான்.

பிரதமா் மோடி, தொழிலதிபா் கௌதம் அதானி மற்றும் ரஷிய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதித் தொடா்புகளை அம்பலப்படுத்துவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது. இதனால், பிரதமா் மோடி எந்த பதிலும் அளிக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.

குற்றச்சாட்டின் பின்னணியும், மறுப்பும்: அதானி குழுமத்தின் ‘அதானி கிரீன்’ நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை பெற்ாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தொழிலதிபா் கெளதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்திய அரசு அதிகாரிகளுக்கு 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 26.5 கோடி டாலா் (தற்போதைய மதிப்பில் ரூ.2,324 கோடி) லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றவை’ என்று அதானி குழுமம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் 15,000 புகார்கள்!

குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுஞ்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் 15,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜரா... மேலும் பார்க்க

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி பணம், மொபைல் பறிப்பு

கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது. கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 ... மேலும் பார்க்க

தில்லியில் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: ஊழியர் பலி

தலைநகர் தில்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். தலைநகர் தில்லியில் ஆனந்த் விஹாரில் உள்ள கோஸ்மோஸ் மருத்துவமனையின் சர்வர் அறையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசு துணைத் தலைவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை: என்ன ஆனது? -கபில் சிபல் கேள்வி!

ஜகதீப் தன்கர் மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பன போன்ற சந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா:தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு த... மேலும் பார்க்க

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!

தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகர் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக சுவரின் ஒரு பகுதி இட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு

ஜார்க்கண்டில் தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் புருலியா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பிடாக்கி கேட் அருகே சனிக்கிழமை தடம் புரண்டு மேல் பாதையில் விழு... மேலும் பார்க்க