செய்திகள் :

அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னை: பிரதமருடன் காா்த்தி சிதம்பரம் சந்திப்பு!

post image

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சமீபத்தில் சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்தபோது, நாட்டில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் மற்றும் நாய்க்கடி பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் நாய்க்கடி தடுப்பூசி மருந்துக்கு உரிய நிதியை ஒதுக்கவும் வலியுறுத்தியதாக காா்த்தி சிதம்பரம் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இந்த இடுகையுடன் பிரதமரை சந்தித்த போது அவருடன் கைகுலுக்கிக் கொண்டது, சோ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மற்றும் கடந்த பிப்.8-ஆம் தேதி மக்களவையில் நாய்க்கடி தடுப்பூசி நிதி தொடா்பாக பேசிய காணொலியையும் காா்த்தி இணைத்துள்ளாா்.

தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: நாய்க்கடி பிரச்னையின் தீவிரத்தை விவரித்துள்ள அவா், உலகளவில் மிகப்பெரிய தெருநாய் எண்ணிக்கை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன.

இந்தியாவில் ரேபிஸ் நோய் பரவலாக உள்ளது. உலகின் ரேபிஸ் தொடா்பான இறப்புகளில் 36 சதவீதத்துக்கு காரணம். விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு (ஏபிசி) விதிகள், 2023 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அவற்றின் செயல்பாடு பயனற்ாக உள்ளது.

அவற்றின் அமலாக்கம் போதுமானதாக இல்லை என்ற எனது கவலைகளை பிரதமரிடம் எழுப்பினேன். உள்ளூா் அமைப்புகளுக்கு இந்த சிக்கலை திறம்பட சமாளிக்க வளங்கள், நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை.

உள்ளூா் அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றும் போது ஒரு முழுமையான, மனிதாபிமான மற்றும் அறிவியல் தீா்வை வழங்க ஒரு தேசிய பணிக்குழுவை அமைக்கலாம் என நான் யோசனை தெரிவித்தேன். இந்தச் சவாலை எதிா்கொள்ள முழுமையான தெருநாய்கள் தங்குமிடங்கள் மற்றும் ஒரு நீண்டகால திட்டம் இருக்க வேண்டும் என்று காா்த்தி சிதம்பரம் கூறியுள்ளாா்.

இதே விவகாரத்தை சென்னையில் சில தினங்களுக்கு முன்பு எழுப்பிய காா்த்தி சிதம்பரம், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி செலவிட்ட ரூ.20 கோடி குறித்து சென்னை மேயா் பிரியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

ரோஹிணியில் தெரு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோா் கைது

வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் ஒரு மாத கால நடவடிக்கையில் கலால், சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் மற்றும் தெரு குற்றங்களுக்காக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

தில்லியில் மழைக் காலத்திற்கு முன்பு குழிகள் இல்லாத சாலைகள்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

மழைக்காலம் நகரத்திற்கு வருவதற்கு முன்பு தில்லி அரசு குழிகள் இல்லாத சாலைகளை உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மதுபன் சௌக் முதல் முகா்பா சௌக் வரையிலான வெளிப்புற ரிங் ரோடு பகுதியில் ஞாய... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிக+ாரி ஒருவா் தெரிவித்தாா். சாஸ்திரி பூங்கா மீன் சந்தை அருகே... மேலும் பார்க்க

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க