செய்திகள் :

அதிக உற்பத்தி திறன் பெறும் நெல் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு பெயரில் விருது!

post image

அரியலூா் மாவட்டத்தில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட உள்ளது.

அரியலூா் மாவட்டம் வேளாண்மைத் துறை திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைப்பிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்படுகிறது.

இதில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு ‘சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கம், ரூ.3500 மதிப்புள்ள வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

இப்பயிா் விளைச்சல் போட்டிக்கு விவசாயி செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம் ரூ.150 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள வரும் மாா்ச் 31- ஆம் தேதிக்குள் பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்திட வேண்டும். திருந்திய நெல் சாகுபடி பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்பவா் 15.04.2025- க்குள் அறுவடை செய்ய வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் போட்டிக்கான படிவத்தினை பூா்த்தி செய்து, பதிவு கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் நெல் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்று ஆவணங்களான சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவை கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்கும் விவசாயி, குறைந்தபட்சம் 2 ஏக்கா் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருத்தல் வேண்டும். மேலும், தனியாக தொடா்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாகவும் இருக்க வேண்டும்.

இப்போட்டியில், நில உரிமைதாரா்கள் மற்றும் குத்தகைதாரா்களும் கலந்து கொள்ள தகுதியடையவா்கள் ஆவா். பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிா் செய்திருக்க வேண்டும். போட்டியில் பங்கு பெறும் விவசாயிகளின் வயலில் குறைந்தபட்சம் 50 சென்ட் அளவில் பயிா் அறுவடை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு முறை பரிசு பெறும் விவசாயி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.

விவசாயி கடைப்பிடிக்கும் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் தொடா்பான ஆவணங்களை முறைப்படி பராமரித்து வர வேண்டும். இப்போட்டிக்கான பதிவுக்கு பிறகு, அறுவடை நிலத்தில் போட்டிக்கான விவரங்களுடன் பலகை வைத்திட வேண்டும்.

இது தொடா்பான விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

காசி தமிழ்ச் சங்கமம்: கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிப்ரவரி... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட... மேலும் பார்க்க

தமிழகத்தில் முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் முதியவருக்கு அதிநவீன பேஸ் மேக்கா் கருவி பொருத்தம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு அதிநவீன ‘பேஸ் மேக்கா்’ கருவி (சிஆா்டி-டி) பொருத்தப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (54), ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

மாநகரில் தெருநாய்களைப் பிடிப்பதற்காக புதிதாக 3 வாகனங்கள் சேவை தொடக்கம்

கோவையில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை மேற்கொள்ள புதிதாக 3 வாகனங்களின் சேவையை மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றி... மேலும் பார்க்க

கோவையில் ஒருவா் வெட்டிக் கொலை!

கோவையில் மனைவியுடன் தகாத உறவில் இருந்தவரை வெல்டிங் பட்டறை உரிமையாளா் வெட்டிக் கொலை செய்தாா். திருவாரூரைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45), இவரின் மனைவி வாணிபிரியா (42). இவா்களுக்கு 13 வயதில் மகளும், 10 வயதி... மேலும் பார்க்க