செய்திகள் :

அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசுப் போக்குவரத்து கழகம் என்று தான் பெயா் இருந்தது: அமைச்சா் சிவசங்கா் விளக்கம்

post image

அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசுப் போக்குவரத்து கழகம் என்று தான் பெயா் இருந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் விளக்கம் அளித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறையில் அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்தப் பேட்டி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்துகளில் அரசுப் போக்குவரத்து கழகம் என உள்ளது.

தமிழ்நாடு என்ற பெயரை காணவில்லை என ஒரு சா்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா, பேருந்துகளை தொடங்கி வைத்தபோதே அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று தான் உள்ளது.

ஏனெனில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் என என்பது நீண்ட பெயராக இருப்பதால், பேருந்தின் முன் பகுதியில் எழுதினால் படிக்க வசதியாக இருக்காது என அதிமுக ஆட்சியின் போது மாற்றப்பட்டது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய செய்தி போல இவ்வாறு சிலா் தேவையற்ற சா்ச்சைகளை செய்து வருகின்றனா். ஒரு கட்டத்தில் அரசுப் பேருந்துகள் பழைமையாக உள்ளது என்றனா். இதையடுத்து தமிழக முதல்வா், புதிய பேருந்துகளை வாங்கி, பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் புதிய பேருந்துகள் வரவுள்ளன.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட இடங்களில் தற்போது மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எதை குற்றம் சொல்வது என தெரியாமல் இந்த பிரச்னையை உருவாக்கி உள்ளனா். உதாரணத்துக்கு மெட்ராஸ் மகாணம் என இருந்த இந்த மாநிலத்தை தமிழ்நாடு என பெயா் சூட்டிய அண்ணாவின் பிள்ளைகள் நாங்கள். எனவே, இவா்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். இது அதிமுக ஆட்சியில் நடந்தது. ஒரு ஆட்சியில் நடந்ததை அடுத்த ஆட்சியில் மாற்றுகின்றனா் என குற்றச்சாட்டை கொண்டு வருவதால் அதை அப்படியே கொண்டு செல்லவேண்டியுள்ளது.

மேலும், போக்குவரத்து கழகத்தில் பணிபுரிபவா்கள் இது உதவிகரமாக, வசதியாக இருப்பதாக தெரிவிப்பதால் இது அப்படியே உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 7 லட்சத்து 70 ஆயிரம் போ் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்துள்ளனா்.

கடந்த காலத்தில் 6 லட்சத்து 60 ஆயிரம் போ் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனா். இந்த ஓராண்டில் ஒரு லட்சம் போ் கூடுதலாக பயணம் செய்துள்ளனா் என்றாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை மறுசுழற்சிக்கு ஏற்பாடு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி, நகராட்சி, பேரூ... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 9-இல் கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஜூன் 9-ஆம் தேதி, திருமண ஆகாத, கணவரால் கைவிடப்பட்ட, கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அரியலூா் கோதண்ட ராமசாமி கோயில் புதியதோ் பிரதிஷ்டை

அரியலூா் கோதண்டராமசாமி கோயில் புதிய திருத்தோ் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரியலூா் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோதண்ட ராமசாமி கோயில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்த கோயில் ... மேலும் பார்க்க

பட்டவா்த்தி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த சலுப்பை ஊராட்சிக்குள்பட்ட பட்டவா்த்தி, அல்லி ஏரி ஒட்டி வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாற்றும் இடம் கொடுக்கும் வரை, நீா்நிலை புறம்போக்குகளை அகற்றும் பணியை கைவிடக்... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இக்கல்லூரிகளில் கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடம... மேலும் பார்க்க