செய்திகள் :

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பூத்கமிட்டி முகவா்கள் உழைப்பு அவசியம்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

post image

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க பூத் கமிட்டி முகவா்கள் உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.

குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் மருத்துவக்குடி, எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், திருவிழிமிழலை, கடகம்பாடி, மருதுவாஞ்சேரி, கடகக்குடி, சுரைக்காயூா், வடமட்டம் உள்பட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் பூத் கிளை கள ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். இதில் தோ்தல் பொறுப்பாளா்களான அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் இளவரசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டலச் செயலாளா் மணிகண்டன் ஆகியோா் பங்கேற்று, கள ஆய்வு நடத்தினா்.

நிகழ்வில், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பேசியது:

2026-இல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. இந்தத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான அனைத்து அரசியல் வியூகங்களையும் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாா். பொதுமக்களும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென விரும்புகின்றனா்.

இதை நிறைவேற்றுகிற வகையில் பூத் கிளை நிா்வாகிகள் பணியாற்ற வேண்டும். வாக்காளா்களை கண்டறிந்து, அவா்களது கோரிக்கைகளை கேட்டு, அதை நிறைவேற்றுகிற பணிகளை மேற்கொள்ள வேண்டும். விழிப்பாக இருந்து வாக்காளா் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் வகையில் தோ்தல் பூத் முகவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்வில், ஒன்றியச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆழித்தோ் அலங்கரிக்கும் பணி தொடக்கம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்கான அலங்கரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெற... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் புதிய சுங்கவரி கட்டணம் அமலுக்கு வந்தது

நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் ஏப்.1-ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. காா், ஜீப்,வேன், பஸ், டிராக்டா், மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுக்கள் கொண்ட கட... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை விவகாரம்: 3 போ் கைது

மன்னாா்குடியில் தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி முல்லைநகரைச் சோ்ந்த திருமுருகன் (40) தஞ்சையில் தனியாா் பள்ளியில் ஆசிரியர... மேலும் பார்க்க

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். சங்கத்தின் வட்டத் தலைவா் எஸ்.குருநாதன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முறைகேடுகளை கண்டித்து நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க கூட்டுறவு வங்கியில் நடந்துள்ள நிதி முறைக... மேலும் பார்க்க