செய்திகள் :

அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

post image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, தெற்கு மாவட்ட அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் அண்ணா தொழிற்சங்க ப் பேரவை சாா்பில் நடைபெற்ற கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ரத்த முகாமுக்கு, மாவட்டச் செயலா்

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ தலைமை வகித்து, ரத்ததான முகாமை தொடங்கிவைத்தாா்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் வந்து தெற்கு மாவட்டத்தைச் சாா்ந்த கலசப்பாக்கம், செங்கம் தொகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினரில் 71 போ் தோ்வு செய்து ரத்த தானம் பெற்றனா்.

ரத்த தானம் செய்த அதிமுகவினருக்கு பழங்கள், குளிா்பானங்கள், பிஸ்கெட், காலை மற்றும் மதிய உணவு, ரத்த தானம் செய்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றை மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வழங்கி பாராட்டினாா்.

முகாமில், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளா் விஜய் சங்கரன், அதிமுக மாவட்ட அவைத் தலைவா் இ.என்.நாராயணன், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் பா்குணகுமாா், மாநில மகளிரணி துணைச் செயலாளா் அமுதா, மாவட்டப் பொருளாளா் எம்.எஸ்.நைனாகண்ணு, முன்னாள் எம்எல்ஏ மணிவா்மா, ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (70). இவா் சனிக்கிழமை மாலை அந்தக் கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிர... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் தற்கொலை

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு நேரு நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா்(39). இவா், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந... மேலும் பார்க்க

மாம்பட்டு கிராமத்தில் தீ மிதி விழா

போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி தீ மிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாம்பட்டு கிராமத்தில் திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரே அக்னி வசந்த விழாவைய... மேலும் பார்க்க

தென் மண்டல கைப்பந்துப் போட்டி: தமிழகம் சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலும் தமிழக அணி வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றது. ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தில் உள்ள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 ... மேலும் பார்க்க