செய்திகள் :

அதிமுக பூத் கமிட்டிளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்

post image

சென்னை: அதிமுக பூத் கமிட்டிகளைக் கண்காணிக்க மாவட்டப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அதிமு க பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தோ்தலில், அதிமுக அனைத்து பேரவை தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைக்கும் வகையில், தொகுதிகளுக்குள்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், பூத் கமிட்டிகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பூத் கமிட்டி நிா்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து, அவா்களுக்கு தக்க பயிற்சி அளித்து, தோ்தல் பணிகளில் அவா்களை முழுமையாக ஈடுபடச் செய்வதற்கும்; ஒவ்வொரு பூத்துக்கும் உள்பட்ட இடங்களில் வசித்து வரும் மக்களிடையே வீடுதோறும் சென்று, திமுக ஆட்சி அவலங்கள், அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையிலும் மாவட்டப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, விருதுநகா், திருநெல்வேலி ஆகிய மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அதற்குள்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக 3 முதல் 5 போ் வரை பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட பொறுப்பாளா்கள் அனைவரும், அவரவா் மாவட்டங்களுக்கு நேரில் சென்று, தங்களுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளா்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

உள்கட்சிப் பூசல்? தமிழக பாஜக தலைவர்கள் நாளை தில்லி பயணம்!

தமிழக பாஜக தலைவர்களுக்குள் உள்கட்சிப் பூசல் நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், திடீர் பயணமாக புதன்கிழமை தில்லி செல்லவுள்ளனர்.தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையி... மேலும் பார்க்க

தரங்கம்பாடி கடலில் மீனவர்கள் கருப்புக் கொடி போராட்டம்!

தரங்கம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை தடைசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி படகுகளில் கருப்புக் கொடிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் அரசால... மேலும் பார்க்க

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெய... மேலும் பார்க்க

சென்னையில் குடியரசுத் தலைவர்! சிட்டி யூனியன் வங்கி விழாவில் பங்கேற்பு!

சென்னை: சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை பங்கேற்றுள்ளார்.கர்நாடக மாநிலம் மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு பறக்கும் பூக்கள்!

கேரள மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, விவசாய அறுவடை மற்றும் குடும்ப ஒன்றிணைப்பை கொண்டாடும் முக்கிய திருவிழாவாக அமைந்துள்ளளது. இதையொட்டி கோயம்புத்தூரில் இருந்து டன் கணக்கான பூக்க... மேலும் பார்க்க

15,320 பேருக்கு வேலைவாய்ப்பு! ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் முதலீடுகள் மொத்தம் ரூ.7020 கோடியாக உயர்ந்து, 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ... மேலும் பார்க்க