செய்திகள் :

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு!

post image

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 8 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

ஆரணியில் உள்ள அவரது வீட்டில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று(சனிக்கிழமை) சோதனை நடைபெற்று வருகிறது. அவரது மகன்கள் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் வீடுகளிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2016 - 2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக 125% சொத்துகள் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சேவூர் ராமச்சந்திரனின் மனைவி மணிமேகலை, மகன்கள் விஜயகுமார், சந்தோஷ் குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.

இதையும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

டாஸ்மாக் வழக்கில் அரசு ஊழியர்களைத் துன்புறுத்தும் அமலாக்கத் துறை! - அமைச்சர் சு. முத்துசாமி கண்டனம்

அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக அமைச்சர் சு. முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு புகா... மேலும் பார்க்க

சென்னை இஸ்கான் நடத்தும் நற்பண்புக் கல்வி வகுப்புகள்!

குழந்தைகள் மற்றும் பதின் பருவ வயதினர்களின் ஆன்மீக மற்றும் நல்லொழுக்க வளர்ச்சிக்காக, தனித்துவமான வாராந்திர நற்பண்பு கல்வித் திட்டத்தை சென்னை இஸ்கான் நடத்துகிறது.இந்த வகுப்புகள் ஜூன் 2025 மத்தியில் தொடங... மேலும் பார்க்க

பண்ருட்டி: 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.இதைக் குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:நுண் கற்காலக் கருவியின் பய... மேலும் பார்க்க

மனைவியின் கள்ளக்காதல் மாமியார் உள்பட 3 பேரை கொன்று கணவர் வெறிச்செயல்

ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவி செய்த கள்ளக்காதல் துரோகத்தை தாங்க முடியாத கணவர் மாமியார், சித்தப்பா, சித்தி ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்ப... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 மாடுகள் பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 நாட்டு மாடுகள் பலியானது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகரன். நாட்டு மாடுகளை வளர்த்து வரும் இவர், பெரியகுள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் குறிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆளுநரின் வழக்கு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ... மேலும் பார்க்க