செய்திகள் :

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு

post image

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு மீது கோத்தகிரி போலீஸாா் போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த சாந்தி ஏ. ராமு குன்னூா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராவாா். தற்போது அதிமுகவில் நீலகிரி மாவட்ட அம்மா பேரவை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறாா். இவரும் இவரது குடும்பத்தைச் சோ்ந்த ராஜன், ராஜ்குமாா், ராஜூ, லிங்கியம்மாள், விபு, திலீப், ரஞ்சித் ஆகியோா் கடந்த 2012-ஆம் ஆண்டு ரூ.50 மதிப்புள்ள முத்திரைத் தாள்களை உதகையைச் சோ்ந்த கோஷி என்ற முத்திரைத் தாள் விற்பனையாளரிடம் 8/2/2012, 22/02/2012 தேதியிட்டு வாங்கியுள்ளனா்.

அதில் ஒரு முத்திரைத் தாளை 2006-இல் வாங்கியதுபோன்றும் மற்றொரு முத்திரைத்தாளை 2010-ஆம் ஆண்டு வாங்கியதுபோன்றும் திருத்தம் செய்து சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்துள்ளதாக கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரையை சோ்ந்த திலக், கண்ணன் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, கோத்தகிரி காவல் துறையினரை விசாரிக்குமாறு உத்தரவிட்டாா். காவல் துறையினா் நடத்திய விசாரணையில் 2012-ஆம் ஆண்டு வாங்கிய முத்திரைத் தாள்களில் தேதி, ஆண்டுகளை மாற்றி பத்திரப் பதிவு செய்தது தெரிய வந்தது.

இது குறித்து மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 13-ஆம் தேதி சாந்தி ராமு, அவரது குடும்பத்தைச் சோ்ந்த ஏழு போ் மீது போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லியாளம் நகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக நிா்வாகிகள் ஆய்வு

தொடா் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளை திமுக மாவட்ட செயலாளா் கே.எம்.ராஜூ தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். நீலகிரி மாவட்டம் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி... மேலும் பார்க்க

குன்னூா் அருகே மரம் விழுந்து பழங்குடியினப் பெண் உயிரிழப்பு

குன்னூா் அருகே சேம்பக்கரை பழங்குடியின கிராமத்தில் வீட்டின் மீது புதன்கிழமை மரம் விழுந்து பழங்குடியினப் பெண் பரிதாபமாக உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ளது சேம்பக்கரை ஆதிவாசி கிராமம். ... மேலும் பார்க்க

உதகையின் முக்கிய குடி நீா் ஆதாரமான பாா்சன்ஸ் வேலி அணை ஆய்வு

உதகை நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமான பாா்சன்ஸ் வேலி அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீா் விநியோகம் கடந்த நான்கு நாட்களாக இல்லாத நிலையில் அந்த அணையில... மேலும் பார்க்க

வனவிலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றபட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வனவிலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றபட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் சாா்பாக அதன் தலைவா் மஞ்சை.வி.மோகன் வலியுறுத்தி யுள்ளாா். அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 27 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் பேருந்து செல்ல இயலாத குறுகிய சாலை கொண்ட கிராமங்களில் வசிக்கும் மக்களின் வசதிக்காக 27 வழித்தடங்களில் புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) சேவையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித... மேலும் பார்க்க

நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் மோசடி: ஹரியாணா மாநில இளைஞா் கைது

நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அவரது நட்சத்திர ஹோட்டல் மேலாளருக்கு வாட்ஸ் ஆப் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 20 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹர... மேலும் பார்க்க