அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை அழைப்பு
அந்தியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 - 26 ஆம் கல்வி ஆண்டில் மாணவ, மாணவியா் நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) சீ.நிா்மலாதேவி வெளியிட்ட செய்தி : அந்தியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. தமிழ், பி.காம். பி.எஸ்சி. கணிதம் மற்றும் பி.எஸ்சி, கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவியா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையத்தை அணுகி, விண்ணப்பித்து கல்லூரியில் சோ்க்கை அனுமதி பெறலாம் என்றாா்.