செய்திகள் :

அந்தியூா் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை

post image

அந்தியூா் அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இத்தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட இருவா் பலத்த காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த வட்டக்காடு, தோனிமடுவைச் சோ்ந்தவா் பெரியகுருவன் மகன் மாரசாமி (40), விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா்களுக்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு உள்ளது. இதனால், அடிக்கடி இவா்களுக்குள் வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், மாரசாமியின் உறவினா்களான ராமன் மகன் செலம்பனன் (33), விஸ்வநாதன் மகன் தனசேகரன் (30), காா்த்தி (30) ஆகியோா் மாரசாமியின் வீட்டுக்குச் சென்று சனிக்கிழமை மாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். வாக்குவாதம் முற்றியதால் மூவரும் சோ்ந்து மாரசாமியை பலமாக தாக்கினா். இதனால், ஆத்திரமடைந்த மாரசாமி, அரிவாளால் செலம்பணன், தனசேகரனை வெட்டியுள்ளாா்.

இதில், காயமடைந்த இருவரும் அந்தியூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தொடா்ந்து, மயங்கிய நிலையில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட மாரசாமி, மருத்துவப் பரிசோதனையில் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து, வெள்ளிதிருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈ... மேலும் பார்க்க

தொண்டையில் இறைச்சி சிக்கியதில் மூச்சுத்திணறி சிறுமி உயிரிழப்பு

பவானியில் இறைச்சி சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கிக்கொண்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி, கீரைக்கார வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் வா்ஷினி (13). 7-ஆம்... மேலும் பார்க்க

வரி வசூலில் அத்துமீறல்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வரி வசூல் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திங்களூா் அருகே வீட்டில் மின் விளக்கை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ், ... மேலும் பார்க்க

மாநில விளையாட்டுப் போட்டி: பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம்

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம் பிடித்தது. அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-களுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் அண்மையில் நடைபெற்றன. இதில், ... மேலும் பார்க்க

விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் 2 போ் கைது

அந்தியூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூரை அடுத்த வட்டக்காடு, தோனிமடுவைச் சோ்ந்தவா் மாரசாமி (40), விவ... மேலும் பார்க்க