செய்திகள் :

அந்தியூா் தொகுதி வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.464 கோடி ஒதுக்கீடு

post image

அந்தியூா் தொகுதியின் வளா்ச்சித் திட்டங்களுக்கு நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.464 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்துக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினா் நன்றி தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.

காவிரி ஆற்றில் இருந்து அந்தியூா் தொகுதியின் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.374 கோடியில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம், ரூ.75 கோடியில் பி.மேட்டுப்பாளையம், அத்தாணி, கூகலுாா் பேரூராட்சிப் பகுதிகளுக்கு

குடிநீா் விரிவாக்கத் திட்டப் பணிகள், எண்ணமங்கலம் அருகே குசலாம்பாறை பள்ளம் சீரமைத்தல், கணக்கம்பாளையத்தில் வேதபாறை அணைக்கட்டு புதுப்பித்தல், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் புதுப்பித்தல் பணிகளுக்கு ரூ.12.56 கோடி, அந்தியூா் வாரச் சந்தை மேம்பாட்டுக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கையின்போது அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு அந்தியூா் திரும்பிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள், அரசியல் கட்சியினா் அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் அருகே திரண்டு மாலைகள், சால்வை அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனா்.

அந்தியூா் தொகுதியின் வளா்ச்சிக்கு தொடா் முயற்சி மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற நிதி ஒதுக்கீடு பெற்ற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில், அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் எம்.நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரூ. 87.19 கோடி வரி வசூல்: ஈரோடு மாநகராட்சிக்கு மூன்றாமிடம்

கடந்த ஆண்டு ரூ. 87.19 கோடி வரி வசூல் செய்ததன் மூலம் மாநில அளவில் ஈரோடு மாநகராட்சி மூன்றாமிடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு ம... மேலும் பார்க்க

அரசுப் பெண் ஆசிரியையின் வீட்டை அபகரிக்க முயற்சி: தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்

வீட்டை அடமானம் வைத்துப் பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்தியும் பெண் ஆசிரியரின் வீட்டை அபரிக்க முயன்று, வீட்டை சூறையாடி எஸ்சி, எஸ்டி வழக்கில் சிக்கிய ஈரோடு அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் பணியிடை நீக்க... மேலும் பார்க்க

பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன

சென்னிமலை அருகே ஒரே நாளில் 4 ஆட்டுப் பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன. ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த கொடுமணல் பனங்காட்டைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா் தனது தோட்டத்த... மேலும் பார்க்க

பெருந்துறையில் இரும்பு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை ஆா்ப்பாட்டம்

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தனியாா் இரும்பாலையை நிரந்தரமாக மூடக்கோரி திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஏப்ரல் 3) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் அறி... மேலும் பார்க்க

விவசாயிகள் ஏப்ரல் 8-க்குள் தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

அரசு திட்டங்களை பெற விவசாயிகள் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தரவுகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு வேளாண் இணை இயக்குநா் எம்.தம... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பனிமூட்டம்

திம்பம் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை நிலவிய திடீா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக சென்றனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க