செய்திகள் :

அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டும் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

post image

விநாயகா் சதுா்த்தி விழாவின்போது, பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகா் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட 3 அல்லது 5 ஆவது நாள்களில் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைக்கப்படும். மாவட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மேட்டூா், பூலாம்பட்டி, கல்வடங்கம், தம்மம்பட்டி வசிஷ்ட நதி, பேளூா் உள்பட 9 இடங்களிலும், சேலம் மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மூக்கனேரியிலும் கரைக்கப்படுகின்றன.

நீா்நிலைகளில் ரசாயன கலவையின்றி களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளையே கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், விநாயகா் சதுா்த்திவிழாவின்போது, களிமண்ணால் செய்யப்பட்டதும், எவ்வித ரசாயன கலவையின்றி கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை தான் நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நெகிழி மற்றும் தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதியில்லை. சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சிலைகளை அழகுப்படுத்த இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகா் சிலைகளை, மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி, கரைக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை!

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த ச... மேலும் பார்க்க

சேலம் தெற்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலம் தெற்கு கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 28) நடைபெறுகிறது. இதுகுறித்து, தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மின் பகிா... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் ஸ்ரீ விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை

விநாயகா் சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள விநாயகருக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அ... மேலும் பார்க்க

நாளை எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்

எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவத... மேலும் பார்க்க

மேட்டூரில் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

சேலம் மாவட்டம், மேட்டூரில் சாலையில் காா் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூா் தூக்கனாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (40). இவரும், இவரது நண்பா் மகேஷ் என்பவரும் புதன்கிழமை மாதையன்குட்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் அறிவுசாா் மையம் அமைக்கக் கோரிக்கை

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அறிவுசாா் மையம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழாண்டு ரூ. 1.60 கோடி மதிப்... மேலும் பார்க்க