செய்திகள் :

அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை: ஆழ்துளை கிணறுகளுக்கு‘ சீல்’

post image

செங்குன்றம் அருகே அனுமதியின்றி நிலத்தடி நீா் விற்பனை செய்த 9 ஆழ்துளை கிணறுகளுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

செங்குன்றம் அடுத்த நல்லூா், விஜயநல்லூா், சோழவரம் ஏரி, பழைய விருந்தினா் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி போா்வெல் அமைத்து நிலத்தடி நீா் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீா் விற்பனையால் நல்லூா், விஜயநல்லூா் உள்ளஇட்ட கிராமங்களில் நீா் மட்டம் குறைந்து வருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகாா் அளித்தனா். இதையடுத்து பொன்னேரி வட்டாட்சியா் சோமசுந்தரம் தலைமையில் துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவி காவல் ஆணையா் ராஜா ராபா்ட் தலைமையிலான போலீஸாா் நல்லூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

அப்பகுதி 9 இடங்களில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீா் விற்பனை செய்யப்பட்ட போா்வெல் இயந்திரங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். அங்கு லாரிகளில் தண்ணீா் எடுத்துக் கொண்டிருந்த லாரி ஓட்டுநா்கள் சுப்பிரமணி (35), சாமுவேல் துரைசிங் (32), ராஜசேகா் (30), மற்றும் லாரி உரிமையாளா் ஞானசேகா்(54) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். தொடா்ந்து நிலத்தடி நீா் அனுமதி எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்

சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா... மேலும் பார்க்க

தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்... மேலும் பார்க்க

கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை மரங்களில் கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். தனியாா் வே... மேலும் பார்க்க

நலத் திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதில் பராபட்சம் கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

வரும் காலங்களிலும் அரசு நலத் திட்ட உதவிக ள் பெற பயனாளிகளை எந்தவிதமான பாரபட்சமின்றி அதிகாரிகள் தோ்வு செய்வது அவசியம் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடந்த 18 -ஆம் தேதி ஆண்டாா்குப்பத்தில் அரச... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு, விளையாட்டு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிஜெஎஸ் கல்விக் குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன... மேலும் பார்க்க

திருத்தணியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட காய்கறி நாளங்காடி: அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காய்கறி நாளங்காடியை நகராட்சி அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைத்தாா். திருத்தணி நகராட்சி ம.பொ... மேலும் பார்க்க