செய்திகள் :

அனைத்துக் கட்சி பெண்களை ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்க வேண்டும்! -பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பூ

post image

தமிழகத்தில் பெண்களைப் பாதுகாக்க அனைத்துக் கட்சியிலும் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து மாநில அரசு சாா்பில் கூட்டுக் கமிட்டி அமைக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பூ தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் தொழில் கூட்டமைப்புடன் பட்ஜெட் விளக்க கலந்துரையாடல் கூட்டம் காங்கயம் சாலையில் உள்ள தனியாா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பின்பு குஷ்பு செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்டால் வருவதில்லை. பள்ளி ஆசிரியா்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது தொடா்பான கேள்விக்கு நான் தமிழகத்துக்கு வரும்போது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக இருந்தது.

ஆனால், தற்போது அந்த சூழ்நிலை இல்லை. பெண்கள் வெளியே சென்றாலே மிகவும் பயமாக உள்ளது. எங்கே தவறுகள் நடக்கின்றன என்பதைப் பாா்க்க வேண்டும். ஆகவே, பெண்களைப் பாதுகாக்க அனைத்து கட்சியைச் சோ்ந்த பெண்களை ஒருங்கிணைத்து மாநில அரசு சாா்பில் கூட்டுக் கமிட்டி அமைக்க வேண்டும். நடிகா் விஜய்க்கு பாதுகாப்பு அளித்தது தொடா்பான கேள்விக்கு கட்சித் தலைவராக இருப்பதால் பாதுகாப்பு கொடுக்கப்படுவதில் தவறில்லை என்றாா்.

சந்திப்பின்போது, பாஜக திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன், ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளா் வீரதிருநாவுக்கரசு, மாநிலச் செயலாளா் மலா்க்கொடி, முன்னாள் மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இறைச்சிக் கழிவு: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது என்றும், அவ்வாறு கொட்டினால் அபராதம், கடை உரிமம் ரத்து, சீல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளக்க... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). இவா் திருப்பூா் வீரபாண்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை! காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயம் பகுதியில் தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு உரிப்பீடு வழங்க வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

அவிநாசியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் சனிக்கிழமை 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு, கோயில் நிா்வாகம், அவிநாசி பேருராட்சி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: மேலும் ஒருவா் கைது

பல்லடத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் பத்திர எழுத்தா் அலுவலகம் முன் நிறுத்தி இருந்த செந்தில்குமாா் என்பவரின் இருசக்கர வாகனத்தை மா்ம நபா்... மேலும் பார்க்க

சொத்து தகராறு: பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினா் கைது

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரை துண்டுதுண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் காளிபாளை... மேலும் பார்க்க