செய்திகள் :

அனைத்து உடல்களையும் அடையாளம் காண இயலாது: தடயவியல் மருத்துவர்!

post image

குஜராத் மாநிலம் அகமதாபாதில் நேரிட்ட விமான விபத்தில் பலியான அனைத்து உடல்களையும் அடையாளம் காண்பது என்பது இயலாது என தடய அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் நரேஷ் குமார் சோனி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழக்கிழமை பகல் 2 மணியளவில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் உடல்கள் மற்றும் அடையாளம் காணும் பணி குறித்து தடய அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் நரேஷ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கை பல்வேறு தகவல்களை தெரிவிக்கும் வகையில் உள்ளது.

அதாவது, மிகக் கொடூரமான விபத்தாக இது அமைந்துவிட்டது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கருகியிருக்கும் நிலையைப் பார்த்தால், அனைத்து உடல்களையும் அடையாளம் காண்பது என்பது மிகவும் சிக்கலானது. உடல்கூறாய்வு அறைக்கு அனைத்து உடல்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. டிஎன்ஏ சோதனைக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. தற்போது உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரி திரட்டப்பட்டு வருகிறது.

நாள்கள் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்து உடல்கள் கெட்டுப்போகும் அபாயமும் உள்ளது. அதனால், எவ்வளவு விரைவாக டிஎன்ஏ சோதனை செய்ய முடியுமோ அவ்வளவு வேகமாக செய்து முடிக்க தடய அறிவியல் துறையினர் பணியாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் பலியான வெளிநாட்டினரின் உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகளைப் பெற தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபரீதாபாத்: 2 சிறுவா்களைக் கடத்திய நபா் கைது

ஃபரீதாபாத்தில் இரண்டு சிறுவா்களைக் கடத்திச் சென்று அவா்களது குடும்பத்தினரிடம் ரூ.30,000 கப்பம் கேட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது குறித்து ஃபரீதாபாத் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை -பிரியங்கா

வயநாடு: அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி எதிர்காலத்தில் தவறுகள் நிகழக் கூடாது என்று தெரிவித்தார். இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான பிரியங்கா... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: என்கவுன்டரில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேசத்தில், பாலகாட் மாவட்டத்தில் உள்ள பச்சாமா தாதர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பெண்கள் உள்பட நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.பாலகாட் காவல் க... மேலும் பார்க்க

கர்நாடகம்: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்தும் நிறுத்தம் - ஜூன் 16முதல் இயங்காது!

பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் பைக் டாக்ஸிகள் இனி இயங்காது. அம்மாநிலத்தில் பைக் டாக்ஸிகள் இயக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை(ஜூன் 15) நள்ளிரவுமுதல் அமலாகிறது. நாடெங்கிலும் பைக் டாக்ஸ... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

அகமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை காங்கிரஸ்... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! களத்தில் பிரிட்டன் விசாரணைக் குழு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில் பிரிட்டன் நாட்டு விசாரணைக் குழுவும் இடம்பெறுவதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 245 பேர் ... மேலும் பார்க்க