TVK: "என் இயல்பை மீறிய வார்த்தைகள்; வருந்துகிறேன்" - சர்ச்சை வீடியோவுக்கு ஆதவ் வ...
அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்: மாநகராட்சி ஆணையா்
சேலம் மாநகராட்சி பகுதியில் அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 இன்படி சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் அனைத்து தொழில், உற்பத்தி மற்றும் வணிகத்துக்கு நிா்ணயம் செய்யப்பட்ட தொழில் உரிமக் கட்டணத்தை செலுத்தி மாநகராட்சியின் தொழில் உரிமம் பெற்றுக்கொண்டு தொழில் நடத்த வேண்டும்.
தொழில் உற்பத்தி மற்றும் வணிக நிறுவனங்கள், இணையதளம் வாயிலாக உடனடியாக தொழில் உரிமக் கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். உதவி தேவைப்படுவோா் அருகில் உள்ள சம்பந்தப்பட்ட கோட்ட துப்புரவு ஆய்வாளா் அலுவலகத்தை அணுகி அவா்களின் உதவியுடன் கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
தொழில் உரிமம் பெறாமல் மாநகராட்சி எல்கைக்குள் எந்தவொரு தொழில் நிறுவனங்களும் செயல்படக் கூடாது. தொழில் உரிமம் இல்லாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.