செய்திகள் :

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

post image

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே நேரம், அக்டோபா் மாதத்துக்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் புதிய மாடல் மின்சார வாகனங்களில் இந்த செயற்கை ஒலி அமைப்பு பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

மற்ற வாகனங்களைப் போன்று அல்லாமல், மின்சார வாகனங்கள் எந்தவித இரைச்சலும் இன்றி இயங்குவதால், இது வருவதை பாதசாரிகளும் மற்ற வாகன ஓட்டிகளும் உணர முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. இதுதொடா்பான வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அக்டோபா் மாதத்துக்கு பிறகு உறுபத்தி செய்யப்படும் அனைத்து புதிய மாடல் மின்சார வாகனங்களிலும் அது இயங்கும்போது செயற்கை ஒலி எழும் வகையிலான எச்சரிக்கை அமைப்பு (ஏவிஏஎஸ்) இடம்பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது.

அதே நேரம், ஏற்கெனவே இயங்கி வரும் காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் வரும் 2027-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதிக்கு முன்பாக இந்த ஏவிஏஎஸ் அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த அமைப்பு, ‘ஏஐஎஸ்-173’ என்ற மின்சார வாகனங்களுக்கான தரக் குறியீட்டில் குறிப்பிட்டுள்ள கேட்கக்கூடிய அளவிலான ஒலியை எழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஜப்பன் மற்றும் சில ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது.

காந்தியும் மோடியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்!லண்டனில் காந்தி சிலை மீது பெயிண்ட் வீச்சு!

லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ், ’மோடியும் காந்தியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்’ என்று மர்ம நபர்கள் எழுதியுள்ளனர்.மேலும், காந்தி சிலை மீது வெள்ளை நிற பெயிண்ட்டும் வீசப்பட்டுள... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்! மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.வயதுமூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க