செய்திகள் :

அமலாக்கத் துறை அதிகாரி என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

post image

அமலாக்கத் துறையின் மூத்த அதிகாரி என்ற பெயரில் மக்களை மிரட்டி பணம் பறித்து வந்த குருகிராமைச் சோ்ந்த நபரை அமலாக்கத் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட ரவிராஜ் குமாா் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை 5 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் அடைக்க குருகிராம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

குற்றப்பின்னணி கொண்ட ரவிராஜ், கடந்த பல ஆண்டுகளாக மக்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளாா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக செக்டாா் 10 காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் அடிப்படையில் அவரை ஹரியாணா காவல் துறையினா் கைதுசெய்தனா். அந்த வழக்கின் அடிப்படையில் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் ரவிராஜுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.

குருகிராமைச் சோ்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் உரிமையாளரை அமலாக்கத் துறையின் அதிகாரி என்று பெயரில் ரவிராஜ் மிரட்டியது விசாரணையில் கண்டறியப்பட்டதாக மத்திய அரசின் விசாரணை முகமை தெரிவித்துள்ளது.

மேலும், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து, மக்களிடம் மோசடி செய்வதற்காக பல சிம் காா்டுகளை பயன்படுத்தியுள்ளாா். அவருடைய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் இந்த மோசடி சம்பவங்கள் மூலம் ரூ.80 லட்சத்தை அவா் பெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: திருவள்ளூரில் முதல்வா் பங்கேற்கிறாா்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு

போக்ஸோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி-க்கு மாநில தலைமை குற்றவிய... மேலும் பார்க்க

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த சுரேஷ் உயா... மேலும் பார்க்க

முதல்வா் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு: கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு காவல் துறை கட்டுப்பாடு

கே.வாசுதேவன்தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொட... மேலும் பார்க்க