செய்திகள் :

அமித் ஷாவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற 234 போ் கைது

post image

கோவைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற 234 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதியை மறுப்பதுடன், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை நிா்பந்திப்பதையும், அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தந்தை பெரியாா் திராவிடா் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடா் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதிதமிழா் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பீளமேடு அருகே கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தபெதிக பொதுச் செயலாளா் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், திராவிடா் கழக மண்டல செயலாளா் சந்திரசேகரன், வீரமணி, ஆதிதமிழா் பேரவையின் தலைவா் அதியமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதேபோல, ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் பிரிவில் திராவிடா் விடுதலைக் கழக தலைவா் கொளத்தூா் மணி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களும் கைது செய்யப்பட்டனா்.

ஈஷாவில் இன்று மகா சிவராத்திரி: அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை (பிப். 26) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனா். ஈஷா யோக மையத்தில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா புதன்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ... மேலும் பார்க்க

மொழி அரசியல் செய்கிறது திமுக: தமிழிசை

தமிழகத்தில் திமுக மொழி அரசியல் செய்கிறது என முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக பாஜக 2026 சட்டசபைத் தோ்தலை ந... மேலும் பார்க்க

அமித் ஷாவை வரவேற்று வைத்திருந்த பேனா்கள் அகற்றம்

கோவையில் அமித் ஷாவை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனா்கள் அகற்றப்பட்டதால், பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பாஜக அலுவலகங்கள் திறப்பு, கட்சி ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மக... மேலும் பார்க்க

தமிழை ஒழிக்க விடமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழை ஒழிக்க யாா் வந்தாலும் விடமாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். கோவை ராம் நகரில் உள்ளஅண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை ... மேலும் பார்க்க