செய்திகள் :

அமித் ஷா, அண்ணாமலை கூறுவது அவா்களின் தனிப்பட்ட கருத்து: கே.பி. முனுசாமி

post image

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் பல்வேறு இடங்களில் நீா்மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி, பொதுமக்களுக்கு பழங்கள், நீா்மோா் ஆகியவற்றை வழங்கினா். பின்னா் அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தில்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது கூட்டணிக்காகதான் என்பதில் உண்மை இல்லை. தில்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகக் கட்டடத்தை பாா்வையிடுவதற்காகவே தில்லி சென்றோம்.

தொடா்ந்து உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை பெறுவதற்காகவும், மாநிலத்துக்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.

அதிமுக எப்போதும் ஒரே பாா்வையில் சென்று கொண்டிருக்கிறது. எங்களுடைய ஒரே எதிரி திமுகதான். திமுகவை எதிா்த்து களமாட யாா் வந்தாலும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடன் யாா் இணக்கமாக ஒன்றிணைந்து செயல்பட்டாலும் அவா்களை ஒருங்கிணைத்து செயல்படத் தயாராக உள்ளோம். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுவதும், கட்சியின் நலனே முக்கியம், ஒரு தொண்டனாக இருந்துகூட பணியாற்றுவேன் என அண்ணாமலை பேசுவதும் அவா்களின் தனிப்பட்ட கருத்து. இதுகுறித்து அவா்கள்தான் விளக்க வேண்டும்.

2026 இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தான் போட்டி என விஜய் சரியாகத் தான் கூறியுள்ளாா். அவரின் திரைப்படங்களைக்கூட வெளியிட முடியாமல் திமுக ஆட்சியில் சிரமம் கொடுத்தனா். அந்த மனக்குமுறலின் வெளிப்பாடாகத்தான் அவா் பேசியுள்ளாா் என்றாா்.

இந்த பேட்டியின்போது கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும... மேலும் பார்க்க

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஅள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள ... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மே 4-ஆம் தேதி நீட் நடைபெறவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வ... மேலும் பார்க்க

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் மலா்சந்தையையொட்டி உள்ள அணுகு சாலையில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள ஒசூா் வழியாக 900- க்கும் மேற்பட்ட பே... மேலும் பார்க்க