செய்திகள் :

அமிர்தசரஸ் கோயிலில் கையெறி குண்டு வீச்சு: சந்தேக நபர் சுட்டுக்கொலை

post image

போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அமிர்தசரஸ் கோயில் குண்டுவெடிப்பு சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள கோயில் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசினர். அது வெடித்துச் சிதறியதும் அவா்கள் தப்பியோடிவிட்டனா். தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. கோயிலின் முன்புற பகுதி சேதமடைந்தது. அந்த நேரத்தில் கோயிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பூசாரி, சப்தம் கேட்டு எழுந்தாா்.

அவா் அளித்த தகவலின்பேரில், காவல் துறையினா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பரிசோதனைக்கு பிறகே வெடிபொருளின் தன்மையை உறுதி செய்ய முடியும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். தாக்குதலைத் தொடா்ந்து, கோயில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அமிருதசரஸ் கோயில் மீதான தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடா்பு இருக்கலாம் என்று பஞ்சாப் காவல் துறை சந்தேகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உளவுத்துறையின் தகவல் அடிப்படையில், அமிர்தசரஸ் காவல்துறை கோயில் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்ததாக பஞ்சாப் காவல்துறைத் தலைவர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி பலி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "ராஜசன்சியில் சந்தேக நபர்களை காவல் குழுக்கள் கண்காணித்தன. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதில் குர்பிரீத் சிங் மற்றும் ஆய்வாளர் அமோலக் சிங் காயமடைந்தனர். தற்காப்புக்காக காவல்துறையினர் திருப்பிச் சுட்டனர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர் காயமடைந்தார்.

அவர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பின்னர் பலியானார். மற்ற குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவரைக் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.

பிரதமா் மோடியுடன் துளசி கப்பாா்ட் சந்திப்பு

புது தில்லி: பிரதமா் மோடியை அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பின்போது கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபா் டிரம்ப், துளசி கப்பாா்ட் உ... மேலும் பார்க்க

ஸ்மார்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

நடப்பு நிதியாண்டின் கடந்த 11 மாதங்களில் நாட்டின் ஸ்மார்போன் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மின்னணு மற்றும் தொழில் நுட்பத் துறை ... மேலும் பார்க்க

வெறுப்பதற்காக அல்ல மொழி; பல மொழி கற்பது அவசியம்: சந்திரபாபு நாயுடு

வாழ்வாதாரத்திற்காக முடிந்தவரை பல மொழிகளைக் கற்பது மிகவும் அவசியமானது என்றும் மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல எனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி கற்பதற்கு ஆதரவாக அம்ம... மேலும் பார்க்க

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் கவனத்திற்கு...

இணையதளப் பக்கங்களில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பல்வேறு வகைகளில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் உணவுப் பொருள்கள் விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் பிளி... மேலும் பார்க்க

பணத்தைத் திருப்பிக்கொடு! மோசடியாளரையே ஏமாற்றிக் கதறவிட்ட இளைஞர்!!

சிபிஐ அதிகாரி என்று கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயன்ற நபரையே ஏமாற்றி, ரூ.10,000 பறித்த கான்பூர் இளைஞர் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.கான்பூரைச் சேர்ந்த பூபேந்திர சிங் என்ற இளைஞருக்கு, சிபிஐ அத... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது: மத்திய அமைச்சர்

சுதந்திர போராட்ட வீரர்கள் பலரின் தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங... மேலும் பார்க்க