செய்திகள் :

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

post image

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்தரவு நியாயமற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீப நாள்களாக ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறிவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தனது தேச நலன்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் இறக்குமதி உள்ளதாக ஏற்கெனவே அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை

மற்ற நாடுகளும் தங்கள் தேசிய விருப்பப்படி வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிலையில், இந்தியாவின் மீது 50% வரி விதிப்பு என்பது துரதிருஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு,

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை நியாயமற்றது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும், ரஷிய எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் ஏற்கெனவே எங்கள் நிலைப்பாட்டை விளக்கிவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

US president donald trump impose additional tariffs on india is extremely unfortunate unfair

சூனியம் வைத்தாக ஒருவர் அடித்துக் கொலை: ஒடிசாவில் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி!

ஒடிசாவில் கஜபதி மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக ஒருவரைக் கிராமத்தினர் அடித்துக் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 28ஆம் தேதி இரவு மாவட்டத்தில் உள்ள மோகனா காவல் எல்லைக்குள்பட்ட க... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

கர்நாடக மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில், முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி... மேலும் பார்க்க

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகைதர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்... மேலும் பார்க்க

பரபரக்கும் மகாதேவபுரா தொகுதி! ராகுல் சொல்வது என்ன?

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்க... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், நாட்டின் நலனுக்கு எதிரான குற்றச்செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

இந்தியாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்த சான்றுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்டார்.மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்... மேலும் பார்க்க